என் மலர்
நீங்கள் தேடியது "ஜல் ஜீவன் மிஷன் திட்டம்"
- தேசிய அளவில் 3-ம் இடம் பிடித்தது
- தேசிய அளவில் 3-ம் இடம் பிடித்தது கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு பாராட்டு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் சுரக்ஷா 2023 திட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 288 கிராம ஊராட்சிகளில் உள்ள 1.89,324 தனிநபர் இல்லங்களில் 2022 அக்டோபர் மாதம் முடிய பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்புகள் 1,88,320 வழங்கப்பட்டுள்ளது.
இது மாநில அளவில் 98.96 சதவீதம் ஆகும். தனிநபர் இல்ல குடிநீர் இணைப்பு வழங்குவதில் ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாட்டில் இரண்டாம் இடத்திலும், அகில இந்திய அளவில் 3-வது இடத்தையும் பெற்றுள்ளது. 288 கிராம ஊராட்சிகளில் இன்று வரை 285 கிராம ஊராட்சிகளில் தனிநபர் குடிநீர் இணைப்பு முழுவ துமாக வழங்கப்பட்டுள்ளது.
தனிநபர் இல்ல குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதிலும் நீர் பரிசோதனை செய்வதிலும், வீடு தோறும் குடிநீர் இணைப்புகள் வழங்கி அதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதிலும் அகில இந்திய அளவில் 60 சதவீதம் விழுக்காடு ராணிப்பேட்டை மாவட்டம் 4 நட்சத்திர குறியீடுகள் பெற்று 2022 அக்டோபர் மாதத்தில் சாதனை பெற்றுள்ளது.புதுடில்லி ஜல்ஜீவன் மிஷன் திட்ட தலைமை அலுவல கத்திலிருந்து நேற்று நடைபெற்ற காணொலி காட்சி கூட்டத்தினில் அதிக அளவில் இலக்குகளை எய்தியதற்கு ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு மத்திய அமைச்சக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளர் நரேந்திர சின்ஹா பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை ஜி.லோகநாயகி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற் பொறியாளர் ஆறுமுகம், ஊரக வளர்ச்சி செயற் பொறியாளர் முத்துச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- குடிநீரின் தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்
- 13-வகையான ஆய்வுகள் மேற்கொள்வதாக தகவல்
நெமிலி:
காவேரிப்பாக்கம் அடுத்த மாமண்டூர் ஊராட்சி, களத்தூர் ஊராட்சி, ஆலப்பாக்கம் ஊராட்சி ஆகிய ஊராட்சி களில் ஜல் ஜீவன் மிஷன் குறித்து, மத்திய குழுவின் சிறப்பு பொறியாளர் சுபாஷ்குமார் சவுத்திரி தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது இத்திட்டத்தின் வாயிலாக அனைத்து குடும்பங்களும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதா? குடிநீரின் தன்மை, மற்றும் மாதம் தோறும் குடிநீர் ஆய்வு செய்யப்படுகிறா? உள்ளிட்ட விளக்கங்களை அதிகாரி களிடம் கேட்டறிந்தனர்.
இதனையடுத்து டேங்க் ஆப்ரேட்டர், மகளிர் குழு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடமும் இக்குழுவினர் விளக்கங்கள் கேட்டறிந்தனர்.
அப்போது அவர்கள் தண்ணீரின் காரத்தன்மை, கடினதன்மை, குளோரைடு, உள்ளிட்ட 13-வகையான ஆய்வுகள் மேற்கொள்வ தாக தெரிவித்தனர்.
பின்னர் இக்குழுவினர் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்கி உள்ள வீடுகளில் தண்ணீர் வருகிறதா? என்பதையும் ஆய்வு செய்து பயனாளிகளிடம் குறைகள் உள்ளதா? எனவும் கேட்டறிந்தனர்.
அப்போது வேதியியல் நிபுணர் முரளி, திட்ட இயக்குநர் லோகநாயகி, உதவி திட்ட அலுவலர் கவுரி வட்டார வளர்ச்சி அலுவலர் தண்டாயுதபாணி, ஒன்றிய பொறியாளர் ஏகநாதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுலோச்சனா பிரகாஷ், மரியப்பிரகாசி கிருஷ்ணன், சாந்தி சுப்பிரமணி, பணி மேற்பார்வையாளர் டீகாராமன் ஊராட்சி செயலர்கள் சங்கர், மகேந்தி ரன், அருள்பாண்டியன், வில்விஜியன் உட்பட பலர் உடனிருந்தனர்.
இதில் அனைவருக்கும் தரமான குடிநீர் கிடைக்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.






