என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இனிப்பு வழங்கி கொண்டாட்டம்"

    • அன்பழகன் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
    • துரை, கணேசன் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    காரிமங்கலம்,

    பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் கிழக்கு ஒன்றிய செயலாளர் அடிலம் அன்பழகன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் பேராசிரியர் அன்பழகன் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத் தலைவர் மாணிக்கம், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சண்முகம், மாதையன், சித்ரா வடிவேல், மாவட்ட பிரதிநிதி சங்கர், நிர்வாகிகள் பானுகுமார், சின்ராஜ், துரை, கணேசன் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • எடப்பாடி பழனிசாமிக்கு அங்கிகாரம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    தேர்தல் ஆணையம் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் அளித்தது. இதனை ஒட்டி திருப்ப த்தூர் நகர அ.தி.மு.க. சார்பி ல் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையம் அருகே நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் டி.டி.குமார் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி பேசினார்.

    முன்னாள் எம்எல்ஏ கே. ஜி. ரமேஷ், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் டாக்டர் என். திருப்பதி, ஒன்றிய செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தனர். அனைவரையும் தொகுதி செயலாளர் கே.எம். சுப்பிரமணியம் வரவேற்றார்.

    இதில் அவைத் தலைவர் ஜி. ரங்கநாதன், துணைச் செயலாளர் ஆனந்தன், தம்பா கிருஷ்ணன், முன்னாள் அரசு வழக்கறிஞர் ரா.ரமேஷ், சந்திரமோகன், நகராட்சி கவுன்சிலர் சதீஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 51 வது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி பொன்விழா ஆண்டாக இன்று கொண்டாடப்படுகிறது.
    • கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

    தருமபுரி,

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரால் 1972 -ம் வருடம் அக்டோபர் மாதம் 17-ம் தேதி மதுரையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் முடிந்து 51 வது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி பொன்விழா ஆண்டாக இன்று கொண்டாடப்படுகிறது.

    இதில் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் இன்று நல்லம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள நல்லம்பள்ளி, பாளையம் புதூர், கொமத்தம்பட்டி, பூமரத்தூர், எட்டியானூர் அங்கனாம்புதூர் மானியதள்ளி,பழைய கோட்ரஸ், உள்ளிட்ட பகுதிகளில் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பாசறை ஒன்றிய செயலாளர் திருமால்வர்மா, தகவல் தொழில் நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் தங்கபாலு,மாணவர் அணி ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய இணைச் செயலாளர் வசந்தா சின்னசாமி, மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×