என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நலவாழ்வு சங்க கூட்டம்"

    • திருச்சி மாவட்டம், நெ. 1 டோல்கேட், நலிந்தோர்நலவாழ்வு சங்கத்தின் 2021-22-ம் ஆண்டுக்கான ஆண்டு மகாசபைக்கூட்டம் பிச்சாண்டார் கோயில்ல நடைபெற்றது.
    • மகாசபைக்கூட்டத்தில் முதன்மை செயல் அலுவலர் பிரசன்னா வரவேற்றுப்பேசினார்.

    திருச்சி,

    திருச்சி மாவட்டம், நெ. 1 டோல்கேட், நலிந்தோர்நலவாழ்வு சங்கத்தின் 2021-22-ம் ஆண்டுக்கான ஆண்டு மகாசபைக்கூட்டம் சங்கத்தலைவர் தனப்பிரகாசம் தலைமையில் பிச்சாண்டார் கோயில் சங்க நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது.

    மகாசபைக்கூட்டத்தில் முதன்மை செயல் அலுவலர் பிரசன்னா வரவேற்றுப்பேசினார். சங்க செயலபாட்டு ஆண்டறிக்கையினை செயலர் லலிதாமேரி சமர்ப்பித்தார்.

    சங்க வரவு செலவு குறித்த தணிக்கை செய்யப்பட்ட நிதியறிக்கையினை சங்க பொருளாளர் சத்தியநாதன் எடுத்துரைத்தார், உபதலைவர் மணிமேகலை மற்றும் உறுப்பினர்கள் கீர்த்தனா, ஜெயராமன், சேவியர் ரோடரிக்ஸ், ஜாக்குலின்மேரி, கற்பகம், விஜயகுமார், கணேசன், விக்டர், ரோஜா ஆரோக்கியமேரி, ராஜசேகரன் மற்றும் சட்ட ஆலோசகர் சசிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சங்க செயல்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் மேற்கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

    ×