என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனம் கவிழ்ந்து சாலையில் சிதறியது"

    • தக்காளி ஏற்றிச்சென்ற வாகனம் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது.
    • வாகனத்தில் இருந்த தக்காளிகள் அனைத்தும் சாலையில் சிதறின. இதனால் அதனை கொண்டு சென்ற வியாபாரிகள் கவலையடைந்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோரூ.25 மற்றும் அதற்கு கீழ் விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலை யடைந்துள்ளனர். இதனால் தக்காளி தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து வருவது அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக ஒட்டன்சத்திரம், அய்யலூர் மார்க்கெட்டுகளில் இருந்து மதுரை, திருச்சி மாவட்ட வியாபாரிகள் தக்காளிகளை வாங்கிச்செல்கின்றனர்.

    மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியை சேர்ந்த வியாபாரிகள் இன்று காலை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து தக்காளி மூடைகளை ஏற்றிக்கொண்டு நத்தம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.

    கொசவபட்டி அருகே தனியார் பள்ளி முன்பு வாகனம் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் வாகனத்தில் இருந்த தக்காளிகள் அனைத்தும் சாலையில் சிதறின. இதனால் அதனை கொண்டு சென்ற வியாபாரிகள் கவலையடைந்தனர். வாகனத்தில் வந்தவர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.

    ×