என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரிகளுடன் வாக்குவாதம்"

    • ஒட்டன்சத்திரத்தில் இருந்து காமலாபுரம் வரை சுமார் 36 கி.மீ தூரத்திற்கு, புதிய 4 வழி சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
    • வீடுகளை இடிப்பதற்கு கால அவகாசம் கேட்டு, வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இருந்து காமலாபுரம் வரை சுமார் 36 கி.மீ தூரத்திற்கு, புதிய 4 வழி சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தற்போது சுமார் 60 சதவீதம் முடிந்துவிட்ட நிலையில், பல்வேறு இடங்களில் பாலங்கள் கட்டும்பணி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், செம்பட்டி அருகே எஸ்.புதுக்கோட்டை கிராமத்தில் 4 வழிச்சாலை பணிகளுக்கு இடையூறாக உள்ள, 13 வீடுகளை அகற்ற 4 வழி நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்திருந்தனர். வீடுகளுக்கான இழப்பீடு தொகை கடந்த, 6 மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்டு விட்டது. இந்நிலையில் முதல் கட்டமாக எஸ்.புதுக்கோட்டை சேர்ந்த மகாலட்சுமி (45), ராமமூர்த்தி (35), மாயாண்டி (45), பூபதியம்மாள் (56) ஆகியோரது வீடுகளை இடிக்க முடிவு செய்தனர்.

    ஆனால் வீடுகளை இடிப்பதற்கு கால அவகாசம் கேட்டு, வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    போலீசார் மற்றும் அதிகாரிகளுடன் வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் அவரது உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சம்பவ இடத்திற்கு, ஒட்டன்சத்திரம் டிஎஸ்.பி முருகேசன், செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    சம்பவ இடத்திற்கு, நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், வீட்டின் உரிமையாளரின் கடும் எதிர்ப்பை மீறி, பொக்லைன் எந்திரம் மூலம் வீடுகளை இடித்து தரைமட்டம் ஆக்கினர். இதனால், இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த இடத்தை பொதுமக்களுக்கு பட்டா பிரித்து அரசு சார்பில் வழங்கப்பட்டது.
    • ஆக்கிரமித்து கடை வைத்திருந்த அந்த நபர் தான் சார்ந்துள்ள கட்சியின் பெயரில் அங்கு ஒரு அலுவலகத்தை தொடங்கி விட்டார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் வாணித்தெரு நுழைவுவாயில் உள்ளது. இங்கு அரசுக்கு சொந்தமான 90 சென்ட் நிலம் உள்ளது.

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த இடத்தை பொதுமக்களுக்கு பட்டா பிரித்து அரசு சார்பில் வழங்கப்பட்டது. பின்னர் மீண்டும் அரசு உபயோகத்துக்கு தேவைப்பட்டதால் பொதுமக்களுக்கு இழப்பீடு கொடுத்து இந்த நிலம் திரும்ப பெறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அந்த நிலத்தின் ஒரு பகுதியில் பழைய இரும்பு கடை ஒன்று ஆக்கிரமித்து நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் விசாரணை நடத்தி அந்த கடையை காலி செய்ய உத்தரவிட்டனர்.

    இதனால் ஆக்கிரமித்து கடை வைத்திருந்த அந்த நபர் தான் சார்ந்துள்ள கட்சியின் பெயரில் அங்கு ஒரு அலுவலகத்தை தொடங்கி விட்டார்.

    இன்றுகாலை ஆக்கிரமிப்பு அகற்ற ேஜ.சி.பி. எந்திரம், தீயணைப்பு துறை வாகனத்துடன் ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, சூளகிரி தாசில்தார் அனிதா, இன்ஸ்பெக்டர் ரஜினி தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் அங்கு வந்தனர்.

    அப்போது ஆக்கிரமிப்பு செய்துள்ளவருக்கு ஆதரவாக அவர் சார்ந்த கட்சியின் நிர்வாகிகளும் அங்கு திரண்டனர். அவர்கள் அதிகாரிகள் -போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ×