என் மலர்
நீங்கள் தேடியது "குடியிருப்பு பணிகள்"
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல்
- 220 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது
வேலூர்:
வேலூர் அடுத்த மேல் மொணவூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் அவர்களுக்கான குடியிருப்பு கட்டும் பணியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு கட்டுமான பணிக்கான கம்பிகள் சிமெண்டு கலவைகள் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் அவர்களுக்கான குடியிருப்புகள் கட்டும் பணிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. 4 குடியிருப்புகள் வீதம், 55 தொகுப்புகளில் 220 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
இங்கு தெருவசதி, மின்விளக்கு மற்றும் வீடுகளுக்கு இடையேயான இடைவெளி உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.
3 கட்டுமான நிறுவனங்கள் மூலம் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. கட்டுமான பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிவடையும். கட்டுமான பணிகளை வாரத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.






