என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Residential works"
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல்
- 220 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது
வேலூர்:
வேலூர் அடுத்த மேல் மொணவூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் அவர்களுக்கான குடியிருப்பு கட்டும் பணியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு கட்டுமான பணிக்கான கம்பிகள் சிமெண்டு கலவைகள் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் அவர்களுக்கான குடியிருப்புகள் கட்டும் பணிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. 4 குடியிருப்புகள் வீதம், 55 தொகுப்புகளில் 220 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
இங்கு தெருவசதி, மின்விளக்கு மற்றும் வீடுகளுக்கு இடையேயான இடைவெளி உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.
3 கட்டுமான நிறுவனங்கள் மூலம் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. கட்டுமான பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிவடையும். கட்டுமான பணிகளை வாரத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்