என் மலர்
நீங்கள் தேடியது "டிராக்டர் மீது மோதல்"
- சங்கராபுரம் அருகே டிராக்டர் டிப்பர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
- பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பகண்டை கூட்டுரோடு அடுத்த வாணா–புரத்தை சேர்ந்தவர் அருள்குமார் (வயது26). இவர் இருசக்கர வாகனத்தில் மாடாம்பூண்டி கிராமத்தில் தனது உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டு விட்டு உறவினருடன் மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். மரூர்-புதூர் அருகே வந்தபோது எதிர்பாரதவிதமாக சாலையோரம் கரும்புலோடுடன் நின்றுகொண்டிருந்த டிராக்டர் டிப்பரின் பின்பக்கம் அருள்குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி–யது. இதில் படுகாயம் அடைந்த அருள்குமார் மருத்துவமனை செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். பின்னால் அமர்ந்து கொண்டிருந்த அவரது உறவினர் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். இது குறித்து பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






