என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலை வெறித்தாக்குதல்"

    • 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
    • போலீசார் நடவடிக்கை

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அருகே நிலம் பிரச்சினை காரணமாக கொலை முயற்சி தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த முருகன் விவசாயி.

    இவருக்கு அதே பகுதி சேர்ந்த பார்த்திபன் (வயது 24), பாண்டியன் (24), பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (30) ஆகியோருக்கும் கடந்த 2 மாதத்திற்கு முன்பு நிலம் சம்பந்தமான பிரச்சினை ஏற்பட்டு கலசப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகில் பார்த்திபன், பாண்டியன், விஜயகுமார் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து முருகனை சரமாரியாக தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதில் படுகாயம் ஏற்பட்ட முருகன் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேரையும் கலசப்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் இந்த 2 பேரும் தொடர்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடாத இருக்கும் வகையில் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தனர்.

    இதன் பேரில் கலெக்டர் முருகேஷ் 3 பேரையும் குண்டர் தொடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தனர்.

    இதன் பெயரில் பார்த்திபன், பாண்டியன், விஜயகுமார் 3 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    ×