என் மலர்
நீங்கள் தேடியது "விருதுபெற"
புதுக்கோட்டை:
மத்திய அரசின் நதி மேம்பாடு மற்றும் கங்கை புதுப்பிக்கும் துறை, நிலத்தடி நீரை உயர்த்தும் விதமாக மழைநீர் சேகரிப்பு, நீர் ஆதாரத்தை புதுப்பித்தல், நீர் பயன்பாட்டுத் திறனை ஊக்குவித்தல், நீரை சுழற்சி செய்து மீளப் பயன்படுத்துதல் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய இனங்களில் புதிய நடைமுறைகளை பின்பற்றும் அதன் பங்காளர்களான தொண்டு நிறுவனங்கள், ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகள், நீரை பயன்படுத்துவோர் சங்கங்கள், நிறுவனங்கள், தொழில் துறை அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் ஆகியோரை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 2018ஆம் ஆண்டுமுதல் ' தேசிய நீர் விருதுகள்" வழங்கி வருகிறது.
இது தொடர்பாக எதிர்வரும் நான்காவது 'தேசிய நீர் விருதுகள்" வழங்கும் போட்டியில் கலந்துகொள்ள தொண்டு நிறுவனங்கள், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், நீரை பயன்படுத்துவோர் சங்கங்கள், நிறுவனங்கள், தொழில் துறை அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் ஆகியோர் தங்கள் பங்கேற்பை வரும் 15-ந் தேதிக்குள் ராஷ்ட்ரீய புரஸ்கார் இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.






