என் மலர்
நீங்கள் தேடியது "விருகம்பாக்கத்தில் முதியவர் கொலை"
- சென்னை விருகம்பாக்கத்தில் சினிமா தயாரிப்பாளர் கொலை வழக்கில் விபசார தரகர் கைது செய்யப்பட்டார்.
- அழகிகள் வர தாமதமானதால் ஏற்பட்ட தகராறில் தீர்த்து கட்டியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பூந்தமல்லி:
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 65). சினிமா தயாரிப்பாளரான இவர், சொந்தமாக கட்டுமான தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் விருகம்பாக்கம், செனாய் நகரில் கூவம் ஆற்றின் கரையோரம் பாஸ்கரன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவரது கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணியை வைத்து அடைத்த நிலையில் அவரது உடல் கருப்பு நிற பிளாஸ்டிக் பையில் வைத்து கட்டி வீசப்பட்டு கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த விருகம்பாக்கம் போலீசார், பாஸ்கரன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாஸ்கரன் கொலைக்கு காரணம் தொழில் போட்டியா? அல்லது முன்விரோதம் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர். மேலும் தனிப்படை அமைத்து கொலையாளியை தீவிரமாக தேடி வந்தனர்.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் பாஸ்கரன் உடலை வீசிவிட்டு சென்றது தெரிந்தது.
மேலும் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் கணேசன் (50) என்பவரது வீட்டுக்கு பாஸ்கரன் கடைசியாக வந்து சென்றதும் தெரிந்தது. அந்த பகுதியில் நின்ற பாஸ்கரனின் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால் கணேசன் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
இந்தநிலையில் செங்குன்றம் அருகே பதுங்கி இருந்த கணேசனை தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர், விபசார தரகர் என்பதும், பாஸ்கரனை கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார்.
கைதான கணேசன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
நான், விருகம்பாக்கம் பகுதியில் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வருகிறேன். சினிமா படங்களுக்கு கதை எழுதுவதாக கூறி அந்த வீட்டில் வசித்து வந்தேன். முதல் மனைவியை பிரிந்து 2-வது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறேன். கடந்த 7 ஆண்டுகளாக பாஸ்கரனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
நான், அழகிகளை வைத்து விபசாரம் செய்யும் தரகராக இருந்து வருகிறேன். பாஸ்கரன் இளம்பெண்களுடன் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டால் என்னிடம் தெரிவிப்பார். நான், அந்த தொழிலுக்கு புதிதாக வரும் இளம்பெண்கள் மற்றும் துணை நடிகைகளுடன் பாஸ்கரன் உல்லாசம் அனுபவிக்க ஏற்பாடு செய்து கொடுப்பேன்.
இதற்காக அவருக்கு நட்சத்திர ஓட்டலில் அறைகளையும் ஏற்பாடு செய்து கொடுப்பேன். சில நேரங்களில் மனைவி மற்றும் மகன் இல்லாதபோது எனது வீட்டுக்கே பாஸ்கரனையும், அழகிகளையும் வரவழைத்து உல்லாசத்துக்கு ஏற்பாடு செய்வேன். அதற்குண்டான தொகையை பாஸ்கரனிடம் இருந்து பெற்றுக்கொள்வேன்.
கடந்த 2-ந் தேதி 2 இளம்பெண்கள் புதிதாக வந்திருப்பதாக பாஸ்கரனிடம் தெரிவித்தேன். உடனே அவரும் ஏ.டி.எம். மையத்தில் இருந்து பணத்தை எடுத்து கொண்டு எனது வீட்டுக்கு வந்தார். ஆனால் அழகிகள் இருவரும் வர தாமதம் ஆனது. இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கரன், எதற்காக இன்னும் அழகிகள் வரவில்லை. அவர்கள் உடனே இங்கு வரவேண்டும் என்று கூறி என்னிடம் தகராறு செய்தார்.
இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் முற்றி இருவரும் மாறி, மாறி சட்டையை பிடித்து கொண்டு தகராறு செய்தோம். அப்போது எனது குடும்பம் குறித்தும், என்னை பற்றியும் பாஸ்கரன் தகாத வார்த்தைகளால் பேசியதால் ஆத்திரம் அடைந்த நான், அவரை பிடித்து கீழே தள்ளினேன். இதில் கீழே விழுந்த பாஸ்கரன், தலையில் காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். மேலும் ஆத்திரம் அடங்காததால் நான், வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் பாஸ்கரன் தலையில் பலமாக தாக்கியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தேன்.
இதையடுத்து அவரது கை, கால்கள் மற்றும் வாயை துணியால் கட்டினேன். பின்னர் அவரது உடலை கருப்பு நிற பிளாஸ்டிக் பையில் சுற்றி கயிறால் கட்டினேன். நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் அவரது உடலை தோளில் தூக்கிச்சென்று சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள கூவம் ஆற்றின் கரையோரம் வீசிவிட்டு சென்றேன். ஆனாலும் போலீசார் என்னை பிடித்து கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கொலைக்கு பயன்படுத்திய இரும்பு கம்பி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பாஸ்கரனை இரவு 7.30 மணி அளவில் கணேசன் கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை பிளாஸ்டிக் பையில் கட்டி வைத்து, ஆட்கள் நடமாட்டம் குறைந்த பிறகு வெளியே கொண்டு சென்று வீசலாம் என நினைத்து உடலை வீட்டிலேயே மறைத்து வைத்தார். சுமார் 7 மணி நேரத்துக்கு பிறகு அதிகாலை 2.30 மணி அளவில் பாஸ்கரன் உடலை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று வீசி உள்ளார்.
மேலும் தகராறு ஏற்பட்ட போது இருவரும் போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கைதான கணேசனிடம் இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
- சென்னை விருகம்பாக்கத்தில் சினிமா தயாரிப்பாளர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
- அவரது கை, கால்களை கட்டி, பிளாஸ்டிக் பையில் உடலை சுற்றி வீசிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பூந்தமல்லி:
சென்னை விருகம்பாக்கம், சின்மயா நகரில் கூவம் ஆற்றை ஒட்டிய பகுதியில் கருப்பு நிற பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் ஆண் பிணம் கிடந்தது. நேற்று காலை அந்த பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த விருகம்பாக்கம் போலீசார், பிளாஸ்டிக் பையை பிரித்து பார்த்தனர். அதில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணியை வைத்து அடைத்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரது முகம் உள்பட உடலின் பல இடங்களில் பலத்த காயங்கள் காணப்பட்டது. மர்மநபர்கள் அவரை கொடூரமாக கொலை செய்து, உடலை அங்கு வீசி இருப்பது தெரிந்தது.
அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரித்தனர்.
அப்போது சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் ஒருவர் தனது தந்தையை காணவில்லை என போலீசில் புகார் செய்து இருப்பது தெரிந்தது. விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர், ஆதம்பாக்கத்தை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் பாஸ்கரன் (வயது 65) என்பது தெரியவந்தது. அவரது உடலை பார்த்து, அது பாஸ்கரன்தான் என அவரது உறவினர்களும் உறுதி செய்தனர். இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
கொலையான பாஸ்கரன், கட்டுமான தொழில் செய்து வந்தார். மேலும் சினிமாவுக்கு பைனான்சும் செய்து வந்தார். அதன்பிறகு நடிகர் ராம்கி நடித்த 'சாம்ராட்' மற்றும் 'ஒயிட்' ஆகிய 2 படங்களை தயாரித்தார். அதன்பிறகு சினிமா துறையை விட்டு விலகி விட்டதாக தெரிகிறது. இவருக்கு பாக்கியம்மாள் (60) என்ற மனைவியும், கார்த்திகேயன் (40), கவுசிக் (36) என 2 மகன்களும் உள்ளனர்.
வழக்கம்போல நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து காரில் வெளியே புறப்பட்டு சென்ற பாஸ்கரன், இரவு தனது மகனை செல்போனில் தொடர்பு கொண்டு, "நான், விருகம்பாக்கத்தில் இருக்கிறேன். சென்னையில் நடைபெறும் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வருகிறேன்" என கூறியுள்ளார்.
ஆனால் அதன்பிறகு அவரது செல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மகன், பல இடங்களில் தேடியும் தந்தையை காணாததால் ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆன்லைன் மூலம் புகார் செய்தார். மேலும் அவரும், உறவினர்களும் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். இதற்கிடையில் நேற்று காலை அவர் விருகம்பாக்கத்தில் பிணமாக மீட்கப்பட்டது தெரியவந்தது.
பாஸ்கரன் சென்ற கார், அவர் பிணமாக கிடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டது. அந்த குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்த கணேசன் என்பவர், தனது வீட்டை பூட்டிவிட்டு அவசர அவசரமாக வெளியேறியதும் தெரிந்தது.
எனவே மர்மநபர்கள், பாஸ்கரனை காரில் கடத்திச்சென்று அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் அடைத்து வைத்து உள்ளனர். பின்னர் அவரது வாயில் துணியை வைத்து அடைத்தும், கை, கால்களை கட்டிப்போட்டும் சரமாரியாக அடித்து கொடூரமாக கொலை செய்து உள்ளனர்.
பின்னர் அவரது உடலை மறைப்பதற்காக கருப்பு நிற பிளாஸ்டிக் பையில் சுற்றி அதனை கூவம் ஆற்றின் கரையோரம் வீசிவிட்டு சென்றதும் தெரியவந்தது. அத்துடன் அவரது ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி லட்சக்கணக்கில் பணம் எடுக்கப்பட்டு இருப்பதும் தெரிந்தது.
பாஸ்கரன் கடைசியாக யாரிடம் பேசினார்? என அவரது செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலையாளிகள் உருவம் பதிவாகி உள்ளதா? என அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.
பாஸ்கரன் கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக அவர் கடத்தி கொலை செய்யப்பட்டாரா? அல்லது பணம், கொடுக்கல் வாங்கல் தகராறா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
- பிளாஸ்டிக் பையில் சுற்றி வீசப்பட்ட நபருக்கு சுமார் 60 வயது இருக்கும்.
- முதியவர் உடலில் பல இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தன.
போரூர்:
சென்னை விருகம்பாக்கம்-கோயம்பேடு இணைப்பு சாலையையொட்டி உள்ள காளியம்மன் தெரு பகுதியில் பெரிய கழிவு நீர் கால்வாய் ஓடுகிறது.
இதனை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் இன்று காலை 7 மணி அளவில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சாலையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கால்வாயையொட்டிய மெயின் ரோட்டில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் உடல் ஒன்று கிடந்தது. இதனை பார்த்து துப்புரவு பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்த னர்.
பின்னர் இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விருகம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டிருந்த உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
பிளாஸ்டிக் பையில் சுற்றி வீசப்பட்ட நபருக்கு சுமார் 60 வயது இருக்கும். அவரது உடலில் பல இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தன. முதியவரான இவரை மர்மநபர்கள் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
பின்னர் உடலை பிளாஸ்டிக் பையில் சுற்றி கால்வாய் பகுதியில் வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். கொலையுண்ட முதியவரை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து கொலை செய்யப்பட்ட நபர் யார்? என்பது அடையாளம் தெரிந்தது. ஆதம்பாக்கத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 67 வயது மதிக்கத்தக்க அவரை கொலையாளிகள் கடத்திச் சென்று கொலை செய்திருப்பது தெரியவந்தது.
கொலையாளிகள் வேறு பகுதியில் வைத்து கொலை செய்து விட்டு உடலை விருகம்பாக்கம் பகுதியில் கொண்டு வந்து வீசி சென்று உள்ளனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
முதியவர் பாஸ்கரன் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவில்லை. அவரை கடத்தி கொடூரமாக கொன்றவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது பற்றி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக வளசரவாக்கம் உதவி கமிஷனர் கவுதமன், கோயம்பேடு உதவி கமிஷனர் ரமேஷ்பாபு, விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஆகியோர் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
பாஸ்கரனுக்கு விரோதிகள் யார்-யார்? என்பது பற்றி அவரது உறவினர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தனிப்படையினர் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.
விருகம்பாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.






