என் மலர்
நீங்கள் தேடியது "கோவில் கும்பாபிஷேகம்"
- கணபதி ஹோமம், கங்கா பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புரா கிராமத்தில் புதுத் தெரு சந்திப்பில் உள்ள வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கணபதி ஹோமம், கங்கா பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன.
நேற்று முன்தினம் கலச பூஜை, மூலமந்திர மகா கணபதி ஹோமம் நடந்து ரத்தினகிரி பாலமுருகனடிமை சாமிகள், கலவை சச்சிதானந்த சாமிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9.30 மணிக்கு கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு முக்கிய வீதிகளில் உலா நடந்தது.






