என் மலர்
நீங்கள் தேடியது "ஊழியர்கள் மாநாடு"
- கிளைசெயலாளர் நடராஜன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.
- மாநிலசெயலாளர் ராஜசேகர் மாநாட்டு துவக்கவுரையாற்றினார்.
தருமபுரி,
பி.எஸ்.என்.எல். ஓய்வு பெற்றோர் அமைப்பு மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் மாவட்ட மாநாடு தருமபுரி பாரதிபுரம் பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இதில் ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாவட்ட தலைவர் கோபாலன், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பருதிவேல் ஆகியோர் தலைமை வகித்தனர்.
கிளை தலைவர் கந்தசாமி சங்க கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார்.கிளைசெயலாளர் நடராஜன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.
மாநிலசெயலாளர் ராஜசேகர் மாநாட்டு துவக்கவுரையாற்றினார். ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயலாளர் சையது இத்ரீஸ், மாநில சிறப்பு அழைப்பாளர் நாராயணசாமி, மாநில உதவி செயலாளர் பாபு மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு அகில இந்திய பொருளாளர் உமாராணி, ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சிரிதரன், அஞ்சல்துறை ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
- 14 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
- காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
சோளிங்கர்:
சோளிங்கரில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் 2-வது வட்ட மாநாடு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்றது.
மாநாட்டிற்கு சோளிங்கர் வட்டத் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். துணை தலை வர்கள் நந்தன், வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயலாளர்கள் பரந்தாமன், தயாளன் ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாநில தலைவர் திருமலைவாசன், மாநில பொதுச்செயலாளர் ரவி, மாநில துணைத்தலைவர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு சங்க கொடியை ஏற்றி வைத்து குத்துவிளக்கு ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்தார்.
கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வுக்கு 10 ஆண்டுகள் என்ற வரம்பை 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும், பழைய முறையிலான ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும், வரையறுக் கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கிராம நிர்வாக உதவியாளர்களுக்கு ஓய்வு பெறுகின்ற போது பணப் பலனை 50 சதவீதம் வழங்க வேண்டும், கிராம உதவியாளர்கள் காலி பணியிடங்களை தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும், டிரைவர் பதவி உயர்வு வழங்க வேண்டும், போனஸ் நாள் கணக்கிட்டு வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் வட்டதுணைத்தலைவர் ரங்கநாதன், இணைச் செயலாளர்கள் தாட்சாயணி, வடிவேல், ரத்னா, பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர்கள் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் நன்றி கூறினர்.






