என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்கொலை . suicide"

    • புதுக்கோட்டையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • திருக்கோகர்ணம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை

     புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை கவிநாடு கிழக்கு பகுதியை சேர்ந்தவர் வீரமணி (வயது 30). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி நேசிகா. இந்த நிலையில் வீரமணி சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரம்பலூர் மாவட்டம் குன்னம் போலீஸ் சரகத்திற்கு––ட்பட்ட தேனூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் அசோகன் ( வயது 33).
    • மனவேதனை அடைந்த அசோகன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் போலீஸ் சரகத்திற்கு––ட்பட்ட தேனூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் அசோகன் ( வயது 33). இவரது மனைவி பாப்பாத்தி இவர்களுக்கு அஜித்தா என்ற மகள் உள்ளார்.

    அசோகன் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இதனால் அடிக்கடி வீட்டில் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட குடும்ப தகராறில் பாப்பாத்தி வீட்டில் கோபித்து கொண்டு அருகில் உள்ள தனத தந்தை வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதனால் மனவேதனை அடைந்த அசோகன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் குன்னம் போலீசார் சம்பவத்துக்கு விரைந்து சென்று அசோக–னின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ–மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×