என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குப்பைகளற்ற மாவட்டமாக மாற்ற வேண்டும்"

    • நம்ம ஊரு சூப்பரு' என்ற இயக்கத்தினை கலெக்டர் தொடங்கிவைத்தாா்.
    • நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பிரசாரங்கள் மற்றும் செயல்பாடுகள் நடைபெற உள்ளன.

    ஊட்டி:

    தொட்டபெட்டா ஊராட்சியில் சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களிடையே கிராம அளவில் விழிப்புணா்வு ஏற்படுத்துவது குறித்து 'நம்ம ஊரு சூப்பரு' என்ற இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கிவைத்தாா்.

    பின்னர் அவா் கூறியதாவது:-

    தமிழக அரசால் திடக்கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களிடையே உரிய விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் பொதுமக்களின் சுகாதாரமான வாழ்க்கைக்கு அவரவா்களின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற மாவட்டம் என்ற நிலையை நீலகிரி அடைந்ததுபோல, குப்பைகளற்ற மாவட்டம் என்ற நிலையை விரைவில் அடைந்திட அனைவரின் பங்களிப்பும் அவசியமாகும்.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களிடையே திடக்கழிவு மேலாண்மை, குப்பைகளை தரம் பிரித்து வெளியேற்றுவது, பொது இடங்களில் குப்பைகளை போடுவதால் ஏற்படும் தீமைகள் ஆகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

    மேலும், பொதுமக்கள் அனைவரும் திடக்கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்து முழுமையாக தெரிந்துகொள்ளும் வகையில் விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சுற்றுச்சூழல் தூய்மையான கிராமங்களை அடையவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் 'நம்ம ஊரு சூப்பரு' என்ற இயக்கம் கிராமப்புற சமூகத்தினரிடையே தொடங்கப்பட்டுள்ளது.

    இச்சிறப்பு இயக்கம் மூலம் நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்டு 20-ந் தேதி முதல் அக்டோபா் 2-ந் தேதி வரை பல்வேறு பிரசாரங்கள் மற்றும் செயல்பாடுகள் நடைபெற உள்ளன. இதனை கண்காணிக்க ஊராட்சி ஒன்றிய அளவில் மண்டல அலுவலா்களும் ஊராட்சி அளவில் பொறுப்பு அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மகளிா் திட்ட இயக்குநா் ஜாகீா் உசேன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் சாம் சாந்தகுமாா்,ஊராட்சி தலைவர் ஜவகர் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    ×