என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவி- கணவர் தற்கொலை"

    • மது பழக்கத்துக்கு அடிமையான இவர் தினசரி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
    • கள்ளக்காதல் விவகாரம் மணிக்குமாருக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். மேலும் வாலிபருடனான கள்ளத் தொடர்பை கைவிடுமாறு கூறினார்.

    கோவை:

    கோவை சூலூர் அருேக உள்ள பள்ளப்பாளையத்தை சேர்ந்தவர் மணிக்குமார் (வயது 42). கூலித் தொழிலாளி. மது பழக்கத்துக்கு அடிமையான இவர் தினசரி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது மனைவிக்கு வேறு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. கணவர் வெளியே செல்லும் நேரத்தில் அவர் தனது கள்ளக்காதலனுடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் மணிக்குமாருக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். மேலும் வாலிபருடனான கள்ளத் தொடர்பை கைவிடுமாறு கூறினார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிக்குமாரின் மனைவி அவரது கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதால் மணிக்குமார் மிகுந்த மனவேதனை அடைந்தார். இதனால் அவர் வேலைக்கு செல்லாம் தினசரி மது குடித்துக்கொண்டே இருந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த மணிக்குமார் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட மணிக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×