என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எடை அளவு"

    • முத்திரையிடாத எடை அளவுகளை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்தார்.
    • நுகர்வோர் எடை குறைபாடுகள் தொடர்பான புகார்களை 04562 225130 என்ற எண்ணுக்கும், தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்திற்கும் தெரிவிக்கலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் வருகிற 18 மற்றும் 25-ந் தேதிகளில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் சிறப்பு கூட்டாய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கூட்டாய்வின் போது மீன் மற்றும் இறைச்சி விற்பனை செய்யும் கடைகளில் எடை அளவுகளை முத்திரையிடாமல் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் தராசுகள் பறிமுதல் செய்யப்படும்.

    அன்றைய தினத்தில் வியாபார பணிகள் ஏதும் மேற்கொள்ள இயலாத சூழல் ஏற்படும். எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து மீன் மற்றும் இறைச்சியை விற்பனை செய்யும் வணிகர்கள் இதுவரை முத்திரை இடப்பட்டாமல் பயன்பாட்டில் வைத்துள்ள எடை அளவுகளை முத்திரை ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்று முத்திரையிட வேண்டும்.

    எடை அளவுகளை உரிய காலத்தில் முத்திரையிடாமல் பயன்படுத்தும் வணிகர்களுக்கு 2000 வருட சட்டமுறை எடை அளவு சட்டத்தின் கீழ் முதலாம் குற்றச்சாட்டுக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும், 2-வது குற்றச்சாட்டு மற்றும் அதற்கு மேலும் குற்றம் செய்பவருக்கு 6 மாதம் வரை ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் நீதிமன்றத்தின் மூலம் விதிக்க வழிவகை உள்ளது.

    எனவே எடை அளவுகளை உரிய காலத்தில் முத்திரையிட்டு பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. நுகர்வோர் எடை குறைபாடுகள் தொடர்பான புகார்களை 04562 225130 என்ற எண்ணுக்கும், தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்திற்கும் தெரிவிக்கலாம்.

    மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் கூறினார்.

    • எடை அளவுகளை முத்திரையிடாமல் பயன்படுத்திய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும் மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படியும். விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர்கள் அடங்கிய குழுவினர் விருதுநகர் மாவட்டத்தில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், சிகரெட் லைட்டர் விற்பனை செய்யும் கடைகளிலும், பழைய இரும்பு வியாபாரம், வேஸ்ட் பேப்பர் கடைகளிலும் சட்டமுறை எடையளவு சட்டம், பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் சிறப்பாய்வு மேற்கொண்டனர்.

    எடையளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரையிடாமல் வியாபார உபயோகத்தில் வைத்திருந்த 7 வணிகர்கள் மீதும், எடையளவுகள் மறுமுத்திரையிடப்ப ட்டதற்கான சான்றினை நுகர்வோர் பார்க்கும் வகையில் வைக்காத 10 வணிகர்கள் மீதும், பொது பயன்பாட்டில் இருந்து தடை செய்யப்பட்டதும், மெட்ரிக் எடையளவுகளின் கீழ் வரையறை செய்யப்படாததுமான அளவைகளை வியாபார பயன்பாட்டிற்காக பயன்படுத்திய 4 வணிகர்கள் மீதும், சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    எடைஅளவுகளை உரிய காலத்தில் முத்திரையிடாமல் பயன்படுத்தும் வணிகர்களு க்கு, சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் முதலாம் குற்றச்சாட்டிற்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதமும், 2-ம் மற்றும் அதற்கு அடுத்த குற்றங்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை மற்றும் அபராதமும் நீதிமன்றத்தின் மூலம் விதிக்க வழிவகை உள்ளது. மேற்கண்ட சிறப்பாய்வில் சிவகாசி தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் முத்து, சதாசிவம், விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர். ராஜபாளையம் மற்றும் உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வர்கள் தயாநிதி, உமாமகேஸ்வரன், துர்கா, சிவசங்கரி ஆகியோர் இணைந்து கூட்டாய்வு மேற்கொண்டனர்.

    இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்துள்ளார்.

    ×