என் மலர்
உள்ளூர் செய்திகள்

முத்திரையிடாத எடை அளவுகளை பயன்படுத்தினால் நடவடிக்கை
- முத்திரையிடாத எடை அளவுகளை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்தார்.
- நுகர்வோர் எடை குறைபாடுகள் தொடர்பான புகார்களை 04562 225130 என்ற எண்ணுக்கும், தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்திற்கும் தெரிவிக்கலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் வருகிற 18 மற்றும் 25-ந் தேதிகளில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் சிறப்பு கூட்டாய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கூட்டாய்வின் போது மீன் மற்றும் இறைச்சி விற்பனை செய்யும் கடைகளில் எடை அளவுகளை முத்திரையிடாமல் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் தராசுகள் பறிமுதல் செய்யப்படும்.
அன்றைய தினத்தில் வியாபார பணிகள் ஏதும் மேற்கொள்ள இயலாத சூழல் ஏற்படும். எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து மீன் மற்றும் இறைச்சியை விற்பனை செய்யும் வணிகர்கள் இதுவரை முத்திரை இடப்பட்டாமல் பயன்பாட்டில் வைத்துள்ள எடை அளவுகளை முத்திரை ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்று முத்திரையிட வேண்டும்.
எடை அளவுகளை உரிய காலத்தில் முத்திரையிடாமல் பயன்படுத்தும் வணிகர்களுக்கு 2000 வருட சட்டமுறை எடை அளவு சட்டத்தின் கீழ் முதலாம் குற்றச்சாட்டுக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும், 2-வது குற்றச்சாட்டு மற்றும் அதற்கு மேலும் குற்றம் செய்பவருக்கு 6 மாதம் வரை ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் நீதிமன்றத்தின் மூலம் விதிக்க வழிவகை உள்ளது.
எனவே எடை அளவுகளை உரிய காலத்தில் முத்திரையிட்டு பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. நுகர்வோர் எடை குறைபாடுகள் தொடர்பான புகார்களை 04562 225130 என்ற எண்ணுக்கும், தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்திற்கும் தெரிவிக்கலாம்.
மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் கூறினார்.






