என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழவகைகளின் தரம் குறித்து ஆய்வு"

    • உழவர்சந்தையில், வேளாண்மை துணை இயக்குனர் காளிமுத்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • இந்திய உணவு தரம் மற்றும் பாதுகாப்பு முகமை சான்று வழங்க அறிவுறுத்தினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுக்கா அலுவலகம் அருகேயுள்ள உழவர்சந்தையில், வேளாண்மை துணை இயக்குனர் காளிமுத்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு விற்கப்படும் காய்கறிகள், பழவகைகளின் தரம் குறித்து அவர் ஆய்வு செய்தார்.

    மேலும், உழவர்சந்தையில் விற்கப்படும் காய்கறிகளின் தரம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த, முதற்கட்டமாக 25 விவசாய உற்பத்தியாளர்களுக்கு, உணவு பாதுகாப்பு துறையுடன் இணைந்து, இந்திய உணவு தரம் மற்றும் பாதுகாப்பு முகமை சான்று வழங்க அறிவுறுத்தினார்.

    மேலும் அவர் கூறுகையில், உழவர் சந்தையால் பயன்பெறும் நுகர்வோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், மாலை நேர உழவர் சந்தை மூலம் அவர்களுக்கு தேவையான இதர வேளாண் பொருட்களான சிறுதானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் இதர மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் அனைத்தையும் உழவர் உற்பத்தியாளர் நிறு வனங்கள் மூலம், விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது.

    எனவே, இந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உழ வர் உற்பத்தியாளர் நிறுவ னங்கள், இது சம்பந்தமாக ஓசூர் உழவர்சந்தை நிர்வாக அலுவலரை தொடர்பு கொள்ளலாம்என்றார்.

    இந்த ஆய்வின்போது, வேளாண்மை அலுவலர்கள், உதவி அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    ×