என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தானியங்கி வாகனம்"

    • மைனஸ் ஜீரோ நிறுவனம் தனது தானியங்கி தொழில்நுட்பத்தை மற்ற வாகன உற்பத்தியாளர்களுக்கு வழங்க இருக்கிறது.
    • தொழில்நுட்பத்தை அனைவரிடம் கொண்டுசேர்க்கும் வகையில் தான் zPod உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    பெங்களூரை சேர்ந்த தானியங்கி வாகன ஸ்டார்ட்அப் நிறுவனம் மைனஸ் ஜீரோ, இந்தியாவின் முதல் தானியங்கி வாகனத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. zPod என்று அழைக்கப்படும் புதிய தானியங்கி வாகனம் அதன் கான்செப்ட் வடிவில் உள்ளது. செயற்கை நுண்ணறிவு நிறுவனம் உருவாக்கி இருக்கும் முழுமையான தானியங்கி தொழில்நுட்பத்தை புதிய zPod காட்சிப்படுத்துகிறது.

    ஆட்டோமோடிவ் உற்பத்தியாளர் இன்றி மைனஸ் ஜீரோ நிறுவனம் தனது தானியங்கி தொழில்நுட்பத்தை மற்ற வாகன உற்பத்தியாளர்களுக்கு வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இதை கொண்டு ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் தங்களின் ADAS சூட்-ஐ மேம்படுத்தவும், வாகனங்களில் அதிக வசதியையும் வழங்க முடியும்.

    தனது தொழில்நுட்பத்தை அனைவரிடம் கொண்டுசேர்க்கும் வகையில் தான் zPod உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று மைனஸ் ஜீரோ தெரிவித்து இருக்கிறது. தானியங்கி தொழில்நுட்பத்தின் மூலம் போக்குவரத்து நெரிசல், சாலை விபத்து மற்றும் அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க மைனஸ் ஜீரோ திட்டமிடுவதாக தெரிவித்து இருக்கிறது.

    மற்ற தானியங்கி வாகனங்களில் இருப்பதை போன்று zPod மாடலில் LIDAR பயன்படுத்தப்படவில்லை. மாறாக காரை சுற்றிலும் முன்புறம் ஒன்று, பின்புறம் ஒன்று, பக்கவாட்டுகளில் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. கேமரா மற்றும் இதர சென்சார்களை கொண்டு தடைகளை தவிர்க்கும் தொழில்நுட்பத்தை மைனஸ் ஜீரோ உருவாக்கி இருக்கிறது. இது ட்ரூ விஷன் ஆட்டோனமி கான்செப்ட் என்று அழைக்கப்படுகிறது.

    இந்த கான்செப்ட்-ஐ தற்போது இருக்கும் எந்த வாகனத்திற்கும் ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மைனஸ் ஜீரோ தெரிவித்துள்ளது. இதுதவிர தற்போது சாலைகளில் வலம்வரும் எந்த வாகனத்திலும் இந்த தானியங்கி தொழில்நுட்பத்தை பொருத்த முடியும். இதற்கு குறிப்பிட்ட காரில் என்ஜின் கண்ட்ரோல் மாட்யுல் மட்டும் இருந்தாலே போதுமானது.

    தானியங்கி வாகனங்களை உருவாக்கும் போது ஏற்படும் பிரச்சினைகளில் சிலவற்றை மைனஸ் ஜீரோ தீர்த்து வைக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதற்காக மைனஸ் ஜீரோ நிறுவனம் நேச்சர் இன்ஸ்பயர்டு ஏ.ஐ. பயன்படுத்துகிறது. விலை உயர்ந்த ஹார்டுவேர், அதிகளவு விவரங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளில் பயணிப்பது போன்ற பிரச்சினைகளை இந்த தொழில்நுட்பம் எளிதில் எதிர்கொள்கிறது.

    இதற்கு ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்கு பயிற்சி அளிப்பதற்கு மாற்றாக, இயற்பியல் சார்ந்த நோக்கம், மனித மூளையை போன்று கணித்தல் முறையில் முடிவுகளை எடுக்கும் திறன் வழங்கப்படுவதாக மைனஸ் ஜீரோ தெரிவித்துள்ளது. zPod தானியங்கி வாகனம், உலகின் எந்த பகுதிக்கும் தனது கேமரா சூட் மூலமாகவே பயணிக்கும். இது கிட்டத்தட்ட ஆட்டோனோமஸ் லெவல் 5-க்கு இணையாக செயல்படும்.

    அதாவது மனித உதவியின்றி நிஜ உலகின் போக்குவரத்து மிக்க சாலைகளில் இந்த தொழில்நுட்பம் சீராக இயங்கும். zPod நான்கு இருக்கைகள் கொண்ட எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். இதில் உள்ள இருக்கைகள் ஒன்றை ஒன்று பார்க்கும் வகையில் பொருத்தப்பட்டு இருக்கிறது. வழக்கமான கார்களில் இருப்பதை போன்று இதில் எவ்வித கண்ட்ரோல்களும் வழங்கப்படவில்லை. கேமரா பயன்பாடு காரணமாக இதற்கான கட்டணம் பலமடங்கு குறைக்கப்பட்டு இருப்பதாக மைனஸ் ஜீரோ தெரிவித்துள்ளது.

    • தானியங்கி வாகனங்கள் மூலம் கால் டாக்சி சேவை வழங்கப்பட இருக்கிறது.
    • தானியங்கி வாகனத்தில் ஓட்டுனர் யாரும் இருக்க மாட்டார்கள்.

    ஹோண்டா, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் குரூயிஸ் நிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் படி மூன்று நிறுவனங்கள் ஒன்றிணைந்து புதிய நிறுவனம் ஒன்றை துவங்க உள்ளன. இந்த புதிய நிறுவனம் 2026 ஆண்டு துவக்கத்தில் ஜப்பான் நாட்டில் தானியங்கி வாகனங்கள் மூலம் கால் டாக்சி சேவையை வழங்க இருக்கிறது.

    புதுவித கால் டாக்சி சேவையில் மூன்று நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய குரூயிஸ் ஒரிஜின் எனும் தானியங்கி வாகனம் வாடிக்கையாளர்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்க இருக்கிறது. இந்த தானியங்கி வாகனத்தில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக, அதில் ஓட்டுனர் யாரும் இருக்க மாட்டார்கள் என்பது தான்.

    இந்த கால் டாக்சி சேவையினை வாடிக்கையாளர்கள் ஆப் மூலம் புக் செய்து பயன்படுத்தலாம். இதற்கான பிரத்யேக செயலியில் வாகனத்தை புக் செய்வதில் இருந்து பயணித்த பிறகு செலுத்த வேண்டிய கட்டணம் என எல்லாவற்றையும் மேற்கொள்ள முடியும். குரூயிஸ் ஒரிஜின் மாடலில் ஸ்டீரிங் வீல் மற்றும் ஓட்டுனர் இருக்கை என எதுவும் இடம்பெற்று இருக்காது.

    குரூயிஸ் ஒரிஜின் வாகனத்தில் அதிகபட்சம் ஆறு பேர் வரை பயணிக்க முடியும். முதற்கட்டமாக மத்திய டோக்கியோவில் இந்த சேவை பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது. அதன்பிறகு மேலும் பல்வேறு பகுதிகளில் படிப்படியாக இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கலாம்.

    • சீனாவின் தேடுப்பொறி சேவை வழங்கும் நிறுவனம் பைடு தனது புது தானியங்கி வாகனத்தை அறிமுகம் செய்தது.
    • இந்த கார் ரோபோ -டாக்சி சேவைக்காக பயன்படுத்தப்பட உள்ளது.

    சீன தேடுப்பொறி சேவை நிறுவனமான பைடு புதிய தானியங்கி வாகனத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த வாகனத்தின் ஸ்டீரிங் வீலை கழற்றி விடும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு வாக்கில் சீனாவில் இந்த வாகனம் ரோபோ-டாக்சி சேவையை வழங்க பயன்படுத்தப்பட இருக்கிறது.


    புதிய தானியங்கி வாகனத்தின் விலை 2 லட்சத்து 50 ஆயிரம் யுவான்கள் வரை இருக்கும் என பைடு நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதே வாகனத்தின் முந்தைய தலைமுறை மாடலின் விலை 4 லட்சத்து 80 ஆயிரம் யுவான்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


    "பெருமளவு விலை குறைப்பின் மூலம் சீனா முழுக்க தானியங்கி வாகனங்கள் எண்ணிக்கையை எங்களால் அதிகப்படுத்த முடியும். நாங்கள் எதிர்காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறோம். ரோபோ-டாக்சியில் பயணம் செய்யும் போது தற்போதைய டாக்சிக்காக கொடுக்கும் பணத்தில் பாதியை மட்டுமே கொடுத்தால் போதும்," என பைடு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராபின் லி தெரிவித்து உள்ளார்.

    புதிய வாகனத்தில் ஆட்டோனோமஸ் லெவல் 4 தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மனித தலையீடு இன்றி காரை முழுமையாக இயக்கும். இந்த காரில் மொத்தம் எட்டு லிடார்களும், 12 கேமராக்களும் உள்ளன. லிடார்கள் டிடெக்‌ஷன் சிஸ்டம்கள் ஆகும். இவை ரேடார்களுக்கு இணையான சேவையை வழங்கும். இந்த வாகனத்தை உற்பத்தி செய்யும் நிறுவனம் பற்றி பைடு எந்த தகவலையும் வழங்கவில்லை.

    ×