என் மலர்
நீங்கள் தேடியது "சமத்துவபுரத்தில் ஆய்வு"
- செம்பட்டி அருகே, சீவல்சரகு ஊராட்சி, சமத்துவபுரத்தில் உள்ள 100 வீடுகளை ரூ.1 கோடிய 62 லட்சம் மதிப்பில் சீரமைப்பதற்கான பணிகள், கடந்த மே மாதம் 11-ம் தேதி தொடங்கப்பட்டது.
- கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி இப்பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.
செம்பட்டி :
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே, சீவல்சரகு ஊராட்சி, சமத்துவபுரத்தில் உள்ள 100 வீடுகளை ரூ.1 கோடிய 62 லட்சம் மதிப்பில் சீரமைப்பதற்கான பணிகள், கடந்த மே மாதம் 11-ம் தேதி தொடங்கப்பட்டது.
இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி சமத்துவபுரத்திற்கு சென்று வீடுகள் சீரமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.
மேற்கூரை முழுவதும் பழுதடைந்த வீடுகளை முழுமையாக சீரமைக்க உத்தரவிட்டதோடு, சீரமைப்பு பணிகள் வீட்டில் இருப்பவர்களுக்கு திருப்தி அடையும் வகையில் இருக்க வேண்டும் என்றார்.
ஆய்வின் போது, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், செயற்பொறியாளர் அணுராதா, ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் ஆத்தூர் (கிழக்கு) முருகேசன் (மேற்கு) ராமன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, ஏழுமலையான், உதவி பொறியாளர் முருகபாண்டி, தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், சீவல்சரகு ஊராட்சி மன்ற தலைவர் ராணி ராஜேந்திரன், தி.மு.க ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணலூர் மணிகண்டன் மற்றும் சமத்துவபுரம் பொதுமக்கள், தி.மு.க நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.






