என் மலர்
நீங்கள் தேடியது "Free தேங்காய்"
- உழவர் சந்தையில் ரூ.200க்கு காய்கறிகள் வாங்கினால் தேங்காய், தக்காளி இலவசம் என அதிகாரிகள் அறிவித்தனர்.
- விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையி்ல் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து தெரிவித்தார்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இயங்கிவரும் உழவர்சந்தையை பலப்படுத்த பேரூராட்சி சேர்மன் மற்றும் துணைச்சேர்மன், வேளாண் விற்பனை அதிகாரிகள் முயற்சி எடுத்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில் இன்று காய்கறி வாங்க வரும் பொதுமக்கள், ரூ.200-க்கு காய்கறிகள் வாங்கினால் வேளாண் அதிகாரி சார்பில் 1 கிலோ தக்காளி மற்றும் காயர் கிளஸ்டர் நிர்வாகி லாரி செல்வம் சார்பில் ஒரு தேங்காய் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தனர்.
மேலும் பொதுமக்களுக்கு தரமான காய்கறிகளை வழங்குவதற்கு ஏதுவாக இந்த சந்தையில் வியாபாரம் செய்ய வரும் மேலவண்ணாயிருப்பு, எஸ்.புதூர் பகுதி விவசாயிகளை அதிகாலை 5 மணிக்கு அரசு வாகனத்தில் சென்று அதிகாரிகள் அழைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
உழவர் சந்தையில் வியாபாரம் செய்து வரும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையி்ல் இந்த திட்டம் அ றிவிக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து தெரிவித்தார்.






