என் மலர்
நீங்கள் தேடியது "விழிப்புணர்வு பயிற்சி முகாம்"
- தடுப்பூசி செலுத்துதல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
- 50--க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.
அரூர்,
அரூரை அடுத்த அள்ளாலப்பட்டியில் பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
விழிப்புணர்வு முகாமில், மாற்று ஊடக மைய இயக்குநரும், பேராசிரியருமான காளீஸ்வரன் பேசுகையில், கிராமங்களில் வசிக்கும் மக்கள் அனைவரும் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்த வரும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
ஆக்சன் எய்ட் மற்றும் சிஸ்கோ தொண்டு நிறுவனங்களின் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து, கிராமப் பகுதியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.
இதில், 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.
- மனிதக்கடத்தல் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி வினா விடை போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
- அங்கன்வாடி ஊழியர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஓசூர்,
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம், மாவட்ட சமூக நலத்துறை மற்றும் ஆராதனா தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பயிற்சி முகாமினை நடத்தின.
ஓசூர் ரயில்நிலைய சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த முகாமிற்கு ஓசூர் சப்-கலெக்டர் தேன்மொழி தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றி வைத்து முகாமினை தொடங்கி வைத்தார்.
மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட சமூக நல குழந்தை பாதுகாப்பு அலுவலர் சிவகாமி, வக்கீல் சந்திரா, அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், சைல்ட் லைன் பிரசன்னகுமாரி , 181 மைய நிர்வாகி சர்வகலா, மற்றும் சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களும்,மனித கடத்தல் குறித்தும், எவ்வித செயல்களெல்லாம் மனித கடத்தல் என்பது பற்றியும் தெளிவாகவும், விளக்கமாகவும் பேசினர். மேலும், மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், மனிதக்கடல் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி வினா விடை போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், கல்லூரி, ஐ.டி.ஐ. மாணவ, மாணவியர், தனியார் பாரா மெடிக்கல் மாணவியர், அங்கன்வாடி ஊழியர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.முடிவில், ஆராதனா அறக்கட்டளை நிறுவனர் ராதா நன்றி கூறினார்.
- கடன் பெற்ற தொகையை தவணை தேதியில் செலுத்தி வட்டி சலுகை பெற்று பயனடையுமாறு தெரிவித்தார்.
- இச்சங்கத்தில் அனைவரும் உறுப்பினர்களாக சேர்ந்து பங்குத்தொகை ரூ.100- மற்றும் பிரவேசக் கட்டணம் ரூ.10- அரசே செலுத்துகிறது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், சித்தேரி பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் மலைவாழ் மக்கள் பொருளாதார முன்னேற்றம் விளக்க கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குநர் சந்தானம் தலைமை தாங்கினார்.
சென்னை நடேசன் கூட்டுறவு பயிற்சி நிலைய துணை இயக்குநர் கணேசன் உறுப்பினர் கல்வி திட்ட முகாமை நடத்தினார். தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குநர் கூறுகையில், பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் சித்தேரி, நலமாங்கடை, பேரோரிபுதூர் ஆகிய கிராமங்களில் உள்ள மலைவாழ் மக்கள் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து கூட்டுறவுத் துறையின் மூலம் மலைவாழ் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களை பெற்று பயனடையுமாறு தெரிவித்தார்.
மேலும் பயிர்கடன், விவசாய நகைகாசுக் கடன் போன்ற வைகளுக்கு தவணைத் தேதியில் திருப்பி செலுத்தினால் அறவே வட்டி இல்லை.
கடன் பெற்ற தொகையை தவணை தேதியில் செலுத்தி வட்டி சலுகை பெற்று பயனடையுமாறு தெரிவித்தார். சுயஉதவி குழுக்கள் அமைத்து சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து குழுக்கடன்கள் பெற்று பயனடையுமாறு தெரிவித்தார்.
மேலும் இச்சங்கத்தில் அனைவரும் உறுப்பினர்களாக சேர்ந்து பங்குத்தொகை ரூ.100- மற்றும் பிரவேசக் கட்டணம் ரூ.10- அரசே செலுத்துகிறது. இச்சங்கத்தில் கால்நடைகளுக்கு ரூ.14 ஆயிரம் பராமரிப்பு செலவிற்காக கடன் வழங்கப்படுகிறது.
இக்கடனை தவணை தேதியில் திருப்பி செலுத்தினால் புதிய கால்நடைகள் வாங்க ரூ.45 ஆயிரம் கடன் வழங்கப்படுகிறது என்பதையும் எடுத்துரைத்தார்.
கடன் பெற்றவர்கள் வாய்தா தேதியில் கடனை திருப்பி செலுத்தி புதிய கடனை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்தார். இந்த உறுப்பினர் கல்வி திட்ட முகாமில் சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிறுவன துணை இயக்குநர் கணேசன் கூறுகையில் (1) கூட்டுறவு இயக்கம் மற்றும் கூட்டுறவு கொள்கைகள், பண்புகள், அங்கத்தினரின் தகுதிகள், கடமைகள் (2) கிராம வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாடு கூட்டுறவின் பங்கு (3) மகளிர் மேம்பாட்டுக்கான திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
பயிற்சி முகாமில் தருமபுரி மண்டல இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குநர் மலைவாழ் மக்களுக்கு உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கினார். மேலும் கால்நடை பராமரிப்பு செலவிற்கான விண்ணப்பம் வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநர் பழனி, செயலாளர், தலைவர், இயக்குநர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.






