என் மலர்
நீங்கள் தேடியது "பூமலர்ச்சி அம்மன்"
- அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே என்.வைரவன்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பூமலர்ச்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடந்தது. இந்த கோவிலில் பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.
இதே போல் கண்டரமாணிக்கம் அருகே என்.கீழையூரில் ராக்காச்சி அம்மன், ஸ்ரீ வல்லநாட்டு கருப்பர் கோவில் மகா கும்பாபிஷேக விழா குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பெரிச்சி சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான சுகந்தனேஸ்வரர் (எ) ஆண்டபிள்ளை நாயனார், சமீப வள்ளியம்மாள் ஸ்ரீ காசி வைரவர் கோலில் திருப்பணி பாலாலயம் மற்றும் பால்குட திருவிழா நடைபெற்றது.






