என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் உள்பட 2 பேர் கைது"

    • பைக்கில் வந்த இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
    • 5 கிலோ எடை கொண்ட சந்தன கட்டை இருப்பது தெரியவந்தது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி வழியாக சந்தன மரக்கட்டைகள் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். அதில் 5 கிலோ எடை கொண்ட சந்தன கட்டை இருப்பது தெரியவந்தது. பைக்கில் வந்த இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ள காட்டரசன்பட்டியை சேர்ந்த முருகன் (29), ஜவ்வாதுமலை மேல்பட்டியை சேர்ந்த சிங்காரம் (34) என்பது தெரியவந்தது. ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • 2 பேர் மாதையனை தாக்கியும், பெட்டிகடையும் அடித்து நொறுக்கினர்.
    • புகாரின் பேரில் போலீசார் வெங்கடாசலம், வைத்தீஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி ராசுவீதி பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது34). இவர் அங்கு பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அதே பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் (23), வைத்தீஸ்வரன் ஆகியோர் கூல்ரிங்ஸ் குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த 2 பேர் மாதையனை தாக்கியும், பெட்டிகடையும் அடித்து நொறுக்கினர்.

    இது குறித்து மாதையன் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வெங்கடாசலம், வைத்தீஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    ×