என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிங்காரப்பேட்டை அருகே  சந்தனமரக்கட்டை கடத்திய   வாலிபர் உள்பட 2 பேர் கைது
    X

    சிங்காரப்பேட்டை அருகே சந்தனமரக்கட்டை கடத்திய வாலிபர் உள்பட 2 பேர் கைது

    • பைக்கில் வந்த இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
    • 5 கிலோ எடை கொண்ட சந்தன கட்டை இருப்பது தெரியவந்தது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி வழியாக சந்தன மரக்கட்டைகள் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். அதில் 5 கிலோ எடை கொண்ட சந்தன கட்டை இருப்பது தெரியவந்தது. பைக்கில் வந்த இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ள காட்டரசன்பட்டியை சேர்ந்த முருகன் (29), ஜவ்வாதுமலை மேல்பட்டியை சேர்ந்த சிங்காரம் (34) என்பது தெரியவந்தது. ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×