என் மலர்
நீங்கள் தேடியது "தீவன உற்பத்தி"
- கால்நடைகளுக்கு வரும் நோய் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றி விளக்கி கூறினார்.
- பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழிற்நுட்ப மேலாளர் மகேஸ்வரி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் முகம்மது சாகீர் ஆகியோர் செய்திருந்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் வட்டாரம் கோபுராஜபுரம் கிராமத்தில் 2022-23ம் ஆண்டிற்கான வேளாண்மை தொழிற்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்குள்ளான தீவன உற்பத்தி தொழிற் நுட்ப பயிற்சி நடைபெற்றது.
முகாமிற்கு வட்டார துணை வேளாண்மை அலுவலர் தெய்வகுமார் தலைமை தாங்கினார். கோபுராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரி ரமேஷ் முன்னிலை வகித்தார்.வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை முலம் வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் வேளாண்மையில் கால்நடைகளின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்ததார்.
சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய கால்நடை மருத்துவர் முத்துகுமார் முகாமில் கலந்துக்கொண்டு கால்நடைகளுக்கு வரும் நோய் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றி விளக்கி கூறினார்.மேலும் கால்நடைகளுக்கு சரிவிகித உணவு வழங்குவது பற்றி எடுத்துரைத்தார்.பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழிற்நுட்ப மேலாளர் மகேஸ்வரி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் முகம்மது சாகீர் ஆகியோர் செய்திருந்தனர்.
முகாமில் 100 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.






