என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூழ் வார்க்கும் திருவிழா"

    • அம்மனுக்கு சிறப்பு பூஜை
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் வெல்லூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழா நேற்று நடைபெற்றது.

    இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்தது.

    தொடர்ந்து அம்மனுக்கு கூழ்வார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. வாணவேடிக்கை மேளவாத்தியங்கள் முழங்க அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    • கூழ் வார்க்கும் விழாவையொட்டி நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தில் நேற்று முன்தினம் 17-ந் தேதி மாரியம்மனுக்கு கூழ் வார்க்கும் திருவிழா நடைபெற்றது.

    இதையொட்டி காலையில் பூங்கரக ஊர்வலம் நடைபெற்றது. பிற்பகலில் கொப்பரையில் கூழ் ஊற்றி, ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. நேற்று சனிக்கிழமை காலை மாரியம்மன் தேர் உற்சவம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு நாடகம் நடந்தது.இதேபோல் கண்ணமங்கலம் அருகே உள்ள வாழியூர் கிராமத்தில் மோகமாரியம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இதையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டது.பிற்பகல் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. சனிக்கிழமை இரவு நாடகம் நடந்தது.

    ×