என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொளத்தூர் மாரியம்மன் கோவில் தேர் உற்சவம்,
    X

    தேர் உற்சவம் நடந்த காட்சி. 

    கொளத்தூர் மாரியம்மன் கோவில் தேர் உற்சவம்,

    • கூழ் வார்க்கும் விழாவையொட்டி நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தில் நேற்று முன்தினம் 17-ந் தேதி மாரியம்மனுக்கு கூழ் வார்க்கும் திருவிழா நடைபெற்றது.

    இதையொட்டி காலையில் பூங்கரக ஊர்வலம் நடைபெற்றது. பிற்பகலில் கொப்பரையில் கூழ் ஊற்றி, ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. நேற்று சனிக்கிழமை காலை மாரியம்மன் தேர் உற்சவம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு நாடகம் நடந்தது.இதேபோல் கண்ணமங்கலம் அருகே உள்ள வாழியூர் கிராமத்தில் மோகமாரியம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இதையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டது.பிற்பகல் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. சனிக்கிழமை இரவு நாடகம் நடந்தது.

    Next Story
    ×