என் மலர்
நீங்கள் தேடியது "கீழ்அரசம்பட்டில் பெருங்கட்டூர் கட்டைக்கூத்து"
- 23-ந் தேதி நடக்கிறது
- மகாபாரத சொற்பொழிவு நடந்து வருகிறது.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த கீழ்அரசம்பட்டில் திரவுபதி அம்மன் கோவிலில் கடந்த 5-ந் தேதி முதல் அம்மனுக்கு அலகு நிறுத்தி, மகாபாரதத் திருவிழா நடந்து வருகிறது.
தினமும் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.
ஜூன் 13-ந் தேதி முதல் இரவில் பெருங்கட்டூர் கட்டைக்கூத்து குழுவினரின் மகாபாரத நாடகங்கள் நடக்கிறது. 23-ந் தேதி காலை துரியோதனன் படுகளம் மாலையில் தீமிதி விழா நடக்கிறது.
மறுநாள் 24-ந் தேதி தருமர் பட்டாபிஷேகம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.






