என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்மன் உற்சவம்"

    • கார்த்திகை தீப விழா தொடக்க நிகழ்ச்சியாக நடக்கிறது
    • நாளை பிடாரி அம்மன் உற்சவம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு இன்று துர்க்கை அம்மன் உற்சவம் நடக்கிறது.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கார்த்திகை தீபத்திருவிழா கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெற்றது.

    சாமி உலா, தேரோட்டம் ஆகியவை கோவிலின் 5-ம் பிரகாரத்தில் நடைபெற்றது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டு உள்ளதால் வழக்கம் போல் கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

    இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும்.

    முதல் நாள் விழாவின் போது காலை மற்றும் இரவில் விநாயகர், வள்ளி தெய்வானையும் சுப்பிரமணியர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெறும்.

    மற்ற நாட்களில் காலையில் விநாயகர், சந்திரசேகரரும், இரவில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெறும். தொடர்ந்து விழாவின் 7-ம் நாளான வருகிற டிசம்பர் மாதம் 3-ந் தேதி (சனிக்கிழமை) பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற உள்ளது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கோவிலில் சாமி சன்னதியில் கருவறைக்கு முன்பகுதியில் அதிகாலை 4 மணியளவில் பரணி தீப தரிசனமும், மாலை 6 மணியளவில் கோவிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீப தரிசனமும் நடைபெற உள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் தெப்பல் உற்சவம் மற்றும் 10-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

    கொடியேற்றத்திற்கு முந்தைய 3 நாட்கள் காவல் தெய்வங்கள் உற்சவம் நடைபெறும். அதன்படி இன்று துர்க்கை அம்மன் உற்சவம் நடைபெற உள்ளது.

    இதையொட்டி இரவு திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காமதேனு வாகனத்தில் மாட வீதி உலா நடைபெறும். தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) கோவில் வளாகத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் பிடாரி அம்மன் உற்சவம் நடைபெறும்.

    அன்று அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் மாட வீதி உலா நடைபெறும். தொடர்ந்து 26-ந் தேதி (சனிக்கிழமை) மூஷிக வாகனத்தில் விநாயகரும், ரிஷப வாக னத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதி உலா நடைபெற உள்ளது.

    இவ்விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • 2 நாட்களாக சாமி வீதி உலா.
    • காப்பு அணிவிப்பு நிகழ்ச்சி நடந்தது.

    வேலூர்:

    சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த மாதம் 31-ந் தேதி காப்பு அணிவித்தல் நிகழ்ச்சி நடந்தது. அன்று முதல் அம்மன் அலங்கரித்து உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் மறு காப்பு அணிவிப்பு நிகழ்ச்சி நடந்தது.

    கடந்த 2 நாட்களாக அம்மனை அலங்கரித்து வீதி உலா நடந்து வருகிறது. இன்று செங்குந்தர் சமுதாய கமிட்டி செயலாளர் எஸ்.எம்.சுந்தரம் தலைமையில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பொருளாளர் மார்க்கபந்து, சத்துவாச்சாரி முன்னாள் நகர மன்ற தலைவர் முருகன், கமிட்டி உறுப்பினர்கள் கே.இ. திருநாவுக்கரசு, எஸ்.எம்.செல்வராஜ், எஸ்.டி.மோகன், பார்த்திபன், காலத்தி, எஸ்.லட்சுமணன், எஸ்.பி.ஈஸ்வரன், பி.ராமச்சந்திரன் மற்றும் கவுன்சிலர் சுமதி மனோகரன், முன்னாள் கவுன்சிலர் பி. கிருபானந்தம், பிஎஸ்.சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×