என் மலர்
நீங்கள் தேடியது "மனோரமா ஆச்சி"
- பூபதியின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- நாளை கண்ணம்மாபேட்டை மயானத்தில் இறுதி சடங்கு நடைபெறுகிறது.
தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நடிகை மனோரமா. "ஆச்சி" என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்டார். இவர் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்றளவும் ரசிகர்களால் நினைவுகூரப்படுகிறார்.
ஆயிரம் திரைப்படங்களுக்கும் மேல் நடித்த மனோரமாவின் மகனான பூபதி உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70. மூச்சு திணறல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த பூபதி கடந்த வாரம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
நடிகர் விசுவின் 'குடும்பம் ஒரு கதம்பம்' படத்தில் அறிமுகமான பூபதி, அதன்பின் சில படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
பூபதியின் மறைவுக்கு திரையுலங்கினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பூபதிக்கு தனலட்சுமி என்ற மனைவியும் ராஜராஜன் என்ற மகனும், அபிராமி, மீனாட்சி என்ற மகள்களும் உள்ளனர். நாளை கண்ணம்மாபேட்டை மயானத்தில் இறுதி சடங்கு நடைபெறுகிறது.
காரைக்குடி:
‘ஆச்சி’ குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் கூறியதாவது:-
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, ரஜினிகாந்த் ஆட்சியை பிடிக்க முடியாது. காரைக்குடி ஆச்சியை வேண்டுமானால் பிடிக்கலாம் என்று கூறியிருக்கிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். அமைச்சரின் இந்த கருத்து நகரத்தாரின் மனதை மிகவும் புண்படுத்தி உள்ளது.

பெண்களை இழிவாக பேசிய அமைச்சர் மீது முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். மேலும் காரைக்குடி ஆச்சியை பற்றி நான் சொல்லவில்லை. மனோரமா ஆச்சி பற்றி தான் சொன்னேன் என்று தற்போது கூறுகிறார். மனோரமா பற்றி பேசவும் அவருக்கு எவ்வித உரிமையும் இல்லை.
அவர் உரிய முறையில் வருத்தம் தெரிவித்திருந்தால் நகரத்தார் சமூகத்தினர் அமைதியாக இருந்திருப்பார்கள். இப்போது அவர் வருத்தம் தெரிவித்த விதம் ஏற்கக்கூடியதாக இல்லை.
நகரத்தார் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்னிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது வழக்கு தொடர வேண்டும் என்று கூறு கிறார்கள். அமைச்சர் உரிய முறையில் வருத்தம் தெரிவிக்காவிட்டால் அவர் மீது வழக்கு தொடர ஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #ministersellurraju






