என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தோனேசியா தங்கச் சுரங்கம்"

    • வடக்கு சுலேவேசியில் உள்ள டோகா திண்டுங் தங்க சுரங்கம் மிகப்பெரிய தங்க சுரங்கங்களில் ஒன்றாகும்.
    • வடக்கு பப்புவாவில் கனமழை பெய்ந்தது.

    ஜகர்த்தா:

    தெற்காசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டது. ஆசிய நாடுகளிலேயே தங்க உற்பத்தியில் முன்னணி நாடாக இருந்து வருகிறது. கடந்த 2024-ம் ஆண்டு இந்தோனேசியாவில் இருந்து மட்டும் சுமார் 100 டன் அளவில் உலக நாடுகளுக்கு தங்கம் ஏற்றுமதி ஆனது.

    வடக்கு சுலேவேசியில் உள்ள டோகா திண்டுங் தங்க சுரங்கம் மிகப்பெரிய தங்க சுரங்கங்களில் ஒன்றாகும். மேலும் கிழக்கு ஜாவாவில் உள்ள சும்பெராகுங் தங்க சுரங்கம், தும்பாங் தங்க சுரங்கம் என அரசு சார்பிலும் தனியார் நிறுவனங்களும் தங்க சுரங்கங்களை தோண்டி தங்கத்தை வெட்டி எடுத்து வருகின்றன. இருப்பினும் நாடு முழுவதும் ஆங்காங்கே சட்டவிரோதமாக தங்க சுரங்கங்கள் தோண்டப்பட்டு தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

    உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்படும் இந்த சுரங்கங்களால் அரசுக்கு நஷ்டம் ஏற்படுவது மட்டுமின்றி அவ்வப்போது அசாம்பாவித சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இதனால் இவற்றை அகற்ற அரசு சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    இந்தநிலையில் மேற்கு பப்புவா மாகாணம் ஏர்பாக் மலைப்பகுதி அருகே சட்டவிரோதமாக தங்க சுரங்கம் தோண்டப்பட்டு தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த சுரங்கத்தில் உள்நாட்டினர் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று வடக்கு பப்புவாவில் கனமழை பெய்ந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சட்டவிரோத தங்க சுரங்கத்துக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. தொழிலாளர்கள் பலர் தங்கம் வெட்டி எடுத்து கொண்டிருந்த சமயத்தில் அந்த சுரங்கம் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.

    இடிபாடுகளில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய 20-க்கும் மேற்பட்டோரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். உயிரிழந்த 6 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மீட்புப்பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

    இந்தோனேஷியாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
    ஜகார்த்தா :

    இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலவேசி பகுதியில் நேற்று கனமழை பொழிந்தது. இதனால், அப்பகுதியில் உள்ள பாகன் எனும் இடத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கத்தில் சரிவு ஏற்பட்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி சுரங்கத்தில் வேலை செய்துவந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

    இந்த விபத்து குறித்து தகவல் வெளியிட்டுள்ள இந்தோனேஷிய பேரிடர் தடுப்பு அமைப்பு, ‘விபத்து நிகழ்ந்த பாகன் பகுதியில் தங்கத் தாது பூமிக்கடியில் அதிகளவில் உள்ளது. எனவே,  இப்பகுதியில் உள்ளவர்கள் தொடர்ந்து சட்டவிரோதமாக தங்க சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    நேற்று இரவு இப்பகுதியில் கனமழை பொழிந்ததையும் அவர்கள் பொருட்படுத்தாமல் சுரங்கத்தில் வேலை செய்துவந்ததால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளது. 
    ×