என் மலர்
நீங்கள் தேடியது "டிஜிபி நியமனம்"
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் டி.ஜி.பி. நியமனம் நடைபெறும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #TNAssembly #Edappadipalanisamy
சென்னை:
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், டி.ஜி.பி. நியமனம் குறித்து ஒரு பிரச்சனையை கிளப்பினார். அப்போது அவர் பேசியதாவது:-
உச்சநீதிமன்றத்தில் கடந்த 3-ந்தேதி வழங்கப்பட்ட பிரகாஷ்சிங் வழக்கு தீர்ப்பில் டி.ஜி.பி. நியமனத்துக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளன.
அதன்படி ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யை தொடர்ந்து 2 வருடங்கள் பணியாற்ற அனுமதிக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் ஓய்வு பெற்ற டி.ஜி.பி. சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக 2 வருடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இது உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்புக்கு எதிரானது. இது போன்ற நியமனங்களால் மூத்த அதிகாரிகள் பலர் டி.ஜி.பி. பதவியை பெற முடியாமலேயே ஓய்வு பெறும் நிலை உள்ளது.
டி.ஜி.பி.யாகும் இளம் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் கனவும் நிறைவேறாமல் போகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தற்போதைய டி.ஜி.பி. 2 வருடங்கள் பதவி வகிப்பது தவறு. எனவே உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு நடந்து கொள்ள வேண்டும். இனி இது போன்ற தவறுகள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதே கருத்தை வலியுறுத்தி சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமியும் பேசினார்.
இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
காவல் துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம், பிரகாஷ் சிங் மற்றும் பலர் தாக்கல் செய்த வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு 3.7.2018 அன்று தன்னுடைய இடைக்கால உத்தரவினை வழங்கியுள்ளது.
உச்ச நீதிமன்றம், மேற்கண்ட இடைக்கால உத்தரவில், மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதிடும் போது 29 மாநிலங்களில், இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றும், தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்கள் மட்டுமே காவல் துறை தலைமை இயக்குநர் நியமனத்திற்கு தேர்வுப் பட்டியலை தயாரிக்க மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு கருத்துருக்களை அனுப்பி வைத்துள்ளன எனவும் தெளிவாகக் குறிப்பிட்டார்.
ஏற்கனவே நடைமுறையில் இருந்த உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றித் தான் தமிழ்நாட்டில் காவல்துறை தலைமை இயக்குநர் நியமனம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டி, அதோடு, 3.7.2018 அன்று மேற்படி வழக்கில், உச்சநீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் சில வழிமுறைகளை புதியதாக வழங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு வரும் காலங்களில், இந்த வழிமுறைகளை பின்பற்றும் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் இரண்டு ஆண்டுக்கு மேல் காவல்துறை தலைமை இயக்குநர் பணியாற்றக் கூடாது என்ற ஒரு கருத்தை சொல்லியிருக்கின்றார். அது அவ்வாறு அல்ல. ஒரு காவல்துறை தலைமை இயக்குநர் நியமிக்கப்பட்ட காலத்திலிருந்து தொடர்ந்து 2 ஆண்டு காலம் இருக்க வேண்டும் என்பது தான், என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டி, ஏற்கனவே, டிஜிபி நியமனத்தை பொறுத்தவரைக்கும், சட்டத்திட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். #TNAssembly #Edappadipalanisamy
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், டி.ஜி.பி. நியமனம் குறித்து ஒரு பிரச்சனையை கிளப்பினார். அப்போது அவர் பேசியதாவது:-
உச்சநீதிமன்றத்தில் கடந்த 3-ந்தேதி வழங்கப்பட்ட பிரகாஷ்சிங் வழக்கு தீர்ப்பில் டி.ஜி.பி. நியமனத்துக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளன.
அதன்படி ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யை தொடர்ந்து 2 வருடங்கள் பணியாற்ற அனுமதிக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் ஓய்வு பெற்ற டி.ஜி.பி. சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக 2 வருடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இது உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்புக்கு எதிரானது. இது போன்ற நியமனங்களால் மூத்த அதிகாரிகள் பலர் டி.ஜி.பி. பதவியை பெற முடியாமலேயே ஓய்வு பெறும் நிலை உள்ளது.
டி.ஜி.பி.யாகும் இளம் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் கனவும் நிறைவேறாமல் போகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தற்போதைய டி.ஜி.பி. 2 வருடங்கள் பதவி வகிப்பது தவறு. எனவே உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு நடந்து கொள்ள வேண்டும். இனி இது போன்ற தவறுகள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதே கருத்தை வலியுறுத்தி சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமியும் பேசினார்.
இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
காவல் துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம், பிரகாஷ் சிங் மற்றும் பலர் தாக்கல் செய்த வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு 3.7.2018 அன்று தன்னுடைய இடைக்கால உத்தரவினை வழங்கியுள்ளது.
உச்ச நீதிமன்றம், மேற்கண்ட இடைக்கால உத்தரவில், மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதிடும் போது 29 மாநிலங்களில், இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றும், தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்கள் மட்டுமே காவல் துறை தலைமை இயக்குநர் நியமனத்திற்கு தேர்வுப் பட்டியலை தயாரிக்க மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு கருத்துருக்களை அனுப்பி வைத்துள்ளன எனவும் தெளிவாகக் குறிப்பிட்டார்.
ஏற்கனவே நடைமுறையில் இருந்த உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றித் தான் தமிழ்நாட்டில் காவல்துறை தலைமை இயக்குநர் நியமனம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டி, அதோடு, 3.7.2018 அன்று மேற்படி வழக்கில், உச்சநீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் சில வழிமுறைகளை புதியதாக வழங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு வரும் காலங்களில், இந்த வழிமுறைகளை பின்பற்றும் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் இரண்டு ஆண்டுக்கு மேல் காவல்துறை தலைமை இயக்குநர் பணியாற்றக் கூடாது என்ற ஒரு கருத்தை சொல்லியிருக்கின்றார். அது அவ்வாறு அல்ல. ஒரு காவல்துறை தலைமை இயக்குநர் நியமிக்கப்பட்ட காலத்திலிருந்து தொடர்ந்து 2 ஆண்டு காலம் இருக்க வேண்டும் என்பது தான், என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டி, ஏற்கனவே, டிஜிபி நியமனத்தை பொறுத்தவரைக்கும், சட்டத்திட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். #TNAssembly #Edappadipalanisamy






