என் மலர்
நீங்கள் தேடியது "சிதம்பரத்தில் போலி ஆவணம்"
சிதம்பரத்தில் போலி ஆவணம் தயாரித்து அரசு வேலைவாங்கி தருவதாக மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் உளுந்தூர் ஆர்.சி.தெருவை சேர்ந்தவர் இளந்தீபன் (வயது 33). இவர் இந்திய உணவு கழகத்தில் வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தார்.
அப்போது சிதம்பரம் சிலுவைபுரத்தை சேர்ந்த ஷோபியா என்பவர் அவருக்கு அறிமுகமானார். இதையடுத்து ஷோபியா, இளந்தீபனிடம் ரூ.5 லட்சம் கொடுத்தால் இந்திய உணவு கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.
இதை உண்மை என்று நம்பிய அவர், ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை ஷோபியாவிடம் கொடுத்தார். இதன்பிறகு அவர் ஒரு பணிநியமன ஆணையை இளந்தீபனிடம் கொடுத்து பணியில் சேர்ந்து கொள்ளுமாறு கூறினார். அந்த ஆணையுடன் இந்திய உணவு கழக அலுவலகத்திற்கு சென்று இளந்தீபன் பணியில் சேர வேண்டும் என்று அங்குள்ள அதிகாரியிடம் கூறினார். அப்போது அந்த ஆணை போலியானது என அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து இளந்தீபன் பற்றி சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஷோபியா, அவரது தாய் ஆரோக்கியசெல்வி(50) ஆகியோர் சிதம்பரம் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்டவர்களிடம் வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கான ரூபாய் வாங்கிக் கொண்டு, கடலூர் சொரக்கால்பட்டில் கணினி மையம் நடத்தி வரும் ரவிச்சந்திரன் (33) என்பவருடன் சேர்ந்து போலி ஆவணங்கள் தயாரித்து ஏமாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் சிலுவைபுரத்தில் முகாமிட்டு ஆரோக்கியசெல்வியையும், ரவிச்சந்திரனையும் கைது செய்தனர்.
ஆனால் போலீசார் நோட்டமிடுவதை அறிந்த முக்கிய குற்றவாளியான ஷோபியா தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் உளுந்தூர் ஆர்.சி.தெருவை சேர்ந்தவர் இளந்தீபன் (வயது 33). இவர் இந்திய உணவு கழகத்தில் வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தார்.
அப்போது சிதம்பரம் சிலுவைபுரத்தை சேர்ந்த ஷோபியா என்பவர் அவருக்கு அறிமுகமானார். இதையடுத்து ஷோபியா, இளந்தீபனிடம் ரூ.5 லட்சம் கொடுத்தால் இந்திய உணவு கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.
இதை உண்மை என்று நம்பிய அவர், ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை ஷோபியாவிடம் கொடுத்தார். இதன்பிறகு அவர் ஒரு பணிநியமன ஆணையை இளந்தீபனிடம் கொடுத்து பணியில் சேர்ந்து கொள்ளுமாறு கூறினார். அந்த ஆணையுடன் இந்திய உணவு கழக அலுவலகத்திற்கு சென்று இளந்தீபன் பணியில் சேர வேண்டும் என்று அங்குள்ள அதிகாரியிடம் கூறினார். அப்போது அந்த ஆணை போலியானது என அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து இளந்தீபன் பற்றி சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஷோபியா, அவரது தாய் ஆரோக்கியசெல்வி(50) ஆகியோர் சிதம்பரம் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்டவர்களிடம் வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கான ரூபாய் வாங்கிக் கொண்டு, கடலூர் சொரக்கால்பட்டில் கணினி மையம் நடத்தி வரும் ரவிச்சந்திரன் (33) என்பவருடன் சேர்ந்து போலி ஆவணங்கள் தயாரித்து ஏமாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் சிலுவைபுரத்தில் முகாமிட்டு ஆரோக்கியசெல்வியையும், ரவிச்சந்திரனையும் கைது செய்தனர்.
ஆனால் போலீசார் நோட்டமிடுவதை அறிந்த முக்கிய குற்றவாளியான ஷோபியா தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.






