என் மலர்
நீங்கள் தேடியது "ஊத்துக்கோட்டை விபத்து"
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே கரகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அழகேசன். இவரது மகன் ராஜேஷ் (வயது30). விவசாயி.
இவர் சீத்தஞ்சேரியில் இருந்து கரகம்பாக்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். செங்குன்றம் பகுதியில் வந்தபோது சாலையின் குறுக்கே திடீரென நரி ஒன்று ஓடியது. அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் அதன் மீது மோட்டர் சைக்கிளை மோதி கீழே விழுந்தார்.
லேசான காயம் அடைந்த நரி அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. கீழே விழுந்ததில் ராஜேசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அவ்வழியே வந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொன்னாலூர்பேட்டை இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #accidentcase






