என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சால்னா"

    • இருவரும் சாப்பிட்டதற்கு பணம் எதுவும் தர வேண்டாம் என கூறி உள்ளார்.
    • விரிவான விசாரணை நடத்தி ஓட்டல் நிறுவனத்தின் மீது தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ம.ரெட்டியப்பட்டி பகுதியில் பிரபல தனியார் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் அப்பகுதியை சேர்ந்த இருவர் ஹோட்டலுக்கு சென்று பரோட்டா ஆர்டர் செய்த நிலையில் சால்னா ஊற்றி சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென சால்னா குழம்பில் ஏதோ மிதப்பது போல தெரியவர பரோட்டா சாப்பிட்டவர்கள் அதனை எடுத்து பார்த்த போது வெட்டுக்கிளி பூச்சியொன்று குழம்பில் செத்து மிதந்து கொண்டிருந்தது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் இது குறித்து ஓட்டல் உரிமையாளரிடம் காண்பித்து நடந்ததை கூறிய போது வழக்கம் போல ஓட்டல் ஊழியர்கள் பாத்திரங்களை மூடாத காரணத்தால் ஒன்றிரண்டு பூச்சி விழுந்திருக்கலாம் எனவும் அது ஒன்றும் செய்யாது எனவும் பொறுப்பற்ற முறையில் அலட்சியமாக பதில் கூறியுள்ளார்.

    இதற்காக இருவரும் சாப்பிட்டதற்கு பணம் எதுவும் தர வேண்டாம் என கூறி உள்ளார். எனினும், இருவரும் சாப்பிட்டதற்கு பணம் செலுத்தி விட்டு ஓட்டலை விட்டு வெளியேறிய சில நிமிடங்களிலேய ஒவ்வாமை ஏற்பட்டு இருவரும் அடுத்தடுத்து வாந்தி எடுக்க ஆரம்பித்த நிலையில் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் ம.ரெட்டியாபட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் ஓட்டல் சம்பவம் குறித்து வந்த புகாரையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மாரியப்பன் உத்தரவின் பேரில் அங்கு விரைந்து சென்ற திருச்சுழி உணவு பாதுகாப்பு அலுவலர் வீரமுத்து உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வுகள் மேற்கொண்டதில் சுகாதார குறைபாடு மற்றும் உணவு தயாரிப்பில் அலட்சியம் காரணமாக நடந்த சம்பவங்கள் அனைத்தும் உண்மையென தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து இயங்கிய உணவகத்தை உடனடியாக மூட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். மேலும் விரிவான விசாரணை நடத்தி ஓட்டல் நிறுவனத்தின் மீது தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

    சாதம், தோசை, பரோட்டா, சப்பாத்தி, இட்லிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மதுரை ஸ்பெஷல் மட்டன் சால்னா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - அரை கிலோ
    துவரம் பருப்பு - 3 ஸ்பூன்
    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி - 2
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    மல்லி தூள் - 2 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    அரைப்பதற்கு..

    தேங்காய் - 3 ஸ்பூன்
    சோம்பு - அரை ஸ்பூன்
    சீரகம் - அரை ஸ்பூன்
    மிளகு -  கால் ஸ்பூன்
    எண்ணெய் - 5 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு...

    பட்டை
    கிராம்பு
    ஏலக்காய்
    பிரியாணி இலை



    செய்முறை :

    மட்டனை கழுவி சுத்தம்செய்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்

    குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து தக்காளியின் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

    பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.

    அடுத்து அதில் துவரம் பருப்பை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 7 விசில் விட்டு இறக்கவும்

    10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து, பச்சை வாசனை போக குழம்பை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், மதுரை ஸ்பெஷல் மட்டன் சால்னா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×