என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ் வலியுறுத்தல்"

    கோவா மாநில முதல்வர் செயல்படாத நிலையில் இருப்பதால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. #ManoharParrikar #GoaCongress
    பனாஜி:

    கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவு காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதால் அரசு நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை. அமெரிக்காவிற்கு இரண்டு முறை சென்று சிகிச்சை பெற்று வந்த அவர் நாடு திரும்பியபிறகு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. மறுநாளே மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவர்களின் ஆலோசனையின்படி கடந்த வியாழக்கிழமை மீண்டும் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றார். வரும் 8-ம் தேதி நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இவ்வாறு தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் அவரது பணிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், முதல்வர் தொடர்ந்து பொறுப்பில் இல்லாததால் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

    இதுபற்றி கோவா மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராமகாந்த் காலப் கூறுகையில், “கோவா மாநிலம் தற்போது அரசியலமைப்பு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. எனவே ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி வலியுறுத்துவதற்காக, கவர்னரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்.

    உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் முதல்வர் பாரிக்கர் தனது அலுவலகத்திற்கு வராமல் உள்ளார். அவரது பொறுப்புகளை வேறு யாரிடமும் கொடுக்கப்படவில்லை. மேலும் அமைச்சர்கள் பாண்டுரங்க மட்காய்கர், பிரான்சிஸ் டிசோசா ஆகியோரும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்வரும் அமைச்சர்களும் எப்போது வருவார்கள் என்ற தகவல்கள் ஏதுமில்லை. மாநிலம் அரசியலமைப்பு நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதால் இந்த விஷயத்தில் கவர்னர் தலையிடவேண்டும்’ என்றார். #ManoharParrikar #GoaCongress

    எடியூரப்பாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த கர்நாடக கவர்னர் வஜுபாய் வாலாவை திரும்ப அழைக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. #KarnatakaCMRace #Vajubhaivala #Congress
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் அக்கட்சியை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்ததார். அத்துடன் எடியூரப்பாவுக்கு முதலமைச்சராக பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார். இன்னும் 15 நாட்களுக்குள் அவர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். 

    ஆட்சியமைக்க 112 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பா.ஜ.க.வுக்கு இருப்பதோ 104 எம்.எல்.ஏ.க்கள். எனவே, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜ.க. வலை விரிக்கத் தொடங்கியிருப்பதாக காங்கிரஸ்  குற்றம் சாட்டியுள்ளது.

    இந்நிலையில், எடியூரப்பாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த கர்நாடக கவர்னர் வஜுபாய் வாலாவை திரும்ப அழைக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.



    இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணிக்கு அறுதி பெரும்பான்மை உள்ளது. ஆனாலும், இவர்களை அழைக்காமல் கவர்னர் வஜுபாய் வாலா பா.ஜ.க.வின் எடியூரப்பாவை முதல் மந்திரியாக பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.  எனவே, அவரை திரும்ப அழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும், பிரதமர் மோடி குஜராத் முதல் மந்திரியாக இருந்தபோது, இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பை கர்நாடக கவர்னர் அழித்துவிட்டார். எனவே கர்நாடக மாநிலத்தின் அப்போதைய கவர்னர் பரத்வாஜை திரும்ப பெறவேண்டும் என ஜனாதிபதிக்கு டுவிட் செய்ததையும் காங்கிரசார் நினைவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது. #KarnatakaCMRace #Vajubhaivala #Congress
    ×