என் மலர்
நீங்கள் தேடியது "தெற்கு சூடான்"
- சட்ட விரோதமாக குடியேறிய அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
- தெற்கு சூடான் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கிய விசாவை அமெரிக்கா உடனே ரத்து செய்வதாக அறிவித்தது.
வாஷிங்டன்:
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார். அதன்படி சட்ட விரோதமாக குடியேறிய அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானுக்கு அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். ஏற்கனவே உள்நாட்டு போரில் சிக்கியுள்ள சூடானில் இதனால் மேலும் கலவரம் ஏற்படும் அச்சம் நிலவுகிறது. எனவே தனது நாட்டின் குடிமக்களை ஏற்றுக்கொள்ள தெற்கு சூடான் அரசாங்கம் மறுத்தது.
இதனையடுத்து தெற்கு சூடான் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கிய விசாவை அமெரிக்கா உடனே ரத்து செய்வதாக அறிவித்தது. எனவே அந்த நாட்டில் இருந்து வரும் குடிமக்கள் அமெரிக்காவின் நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
தெற்கு சூடான் நாட்டின் தலைநகரான ஜுபாவில் இருந்து இன்று புறப்பட்டு சென்ற விமானம் ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். #SouthSudan
ஜுபா:
தெற்கு சூடான் நாட்டின் தலைநகரான ஜுபாவில் இருந்து 24 பயணிகளுடன் தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று இன்று ஈரோல் நகரை நோக்கி புறப்பட்டு சென்றது.
செல்லும் வழியில் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஈரோல் நகரின் அருகே ஆற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் உயிரிழந்த 21 பேரின் பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளன. 6 வயது குழந்தை உள்பட மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #SouthSudan #SouthSudanplanecrash
தெற்கு சூடான் நாட்டின் தலைநகரான ஜுபாவில் இருந்து 24 பயணிகளுடன் தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று இன்று ஈரோல் நகரை நோக்கி புறப்பட்டு சென்றது.
செல்லும் வழியில் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஈரோல் நகரின் அருகே ஆற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் உயிரிழந்த 21 பேரின் பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளன. 6 வயது குழந்தை உள்பட மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #SouthSudan #SouthSudanplanecrash






