என் மலர்
நீங்கள் தேடியது "ஜெயங்கொண்டம் நகராட்சி"
ஜெயங்கொண்டத்தில் நகராட்சி அதிகாரி இழிவாக பேசியதாக கூறி பெண் எழுத்தர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் வரி வசூலிப்பவர், பதிவறை எழுத்தர், இளநிலை உதவியாளர், புள்ளி விவர கணக்காளர் உள்ளிட்ட ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். இந்த அலுவலகத்தின் மேலாளர் கடந்த சில நாட்களாக பெண் ஊழியர்களை இழிவாக பேசியும், அதிக அளவில் பணிச்சுமை கொடுத்தும் மன உளைச்சல் ஏற்படுத்துவதாக ஊழியர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அலுவலக பதிவறை எழுத்தராக பணிபுரியும் லட்சுமி (வயது 41) நேற்று காலை வரி வசூலுக்கு சென்றுவிட்டு மீண்டும் அலுவலக பணியை மேற்கொண்டுள்ளார். அப்போது திடீரென பணி செய்யவில்லை என கூறி அவருக்கு “மெமோ” கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த லட்சுமி திடீரென நான் இதே அலுவலகத்தில் தற்கொலை செய்துகொள்கிறேன் எனக்கூறி நகராட்சி அலுவலக மாடியில் உள்ள அறைக்கு சென்று கதவை வேகமாக பூட்டினார். பின்னர் மின்விசிறியில் தனது சேலையை மாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதனை பார்த்த சக ஊழியர்கள் அவரை மீட்டு ஆறுதல் கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலக சங்கத்தினர் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு அதிகாரியை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது உங்களது பிரச்சனை குறித்து மனுவாக எழுதி கொடுங்கள், நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் வரி வசூலிப்பவர், பதிவறை எழுத்தர், இளநிலை உதவியாளர், புள்ளி விவர கணக்காளர் உள்ளிட்ட ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். இந்த அலுவலகத்தின் மேலாளர் கடந்த சில நாட்களாக பெண் ஊழியர்களை இழிவாக பேசியும், அதிக அளவில் பணிச்சுமை கொடுத்தும் மன உளைச்சல் ஏற்படுத்துவதாக ஊழியர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அலுவலக பதிவறை எழுத்தராக பணிபுரியும் லட்சுமி (வயது 41) நேற்று காலை வரி வசூலுக்கு சென்றுவிட்டு மீண்டும் அலுவலக பணியை மேற்கொண்டுள்ளார். அப்போது திடீரென பணி செய்யவில்லை என கூறி அவருக்கு “மெமோ” கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த லட்சுமி திடீரென நான் இதே அலுவலகத்தில் தற்கொலை செய்துகொள்கிறேன் எனக்கூறி நகராட்சி அலுவலக மாடியில் உள்ள அறைக்கு சென்று கதவை வேகமாக பூட்டினார். பின்னர் மின்விசிறியில் தனது சேலையை மாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதனை பார்த்த சக ஊழியர்கள் அவரை மீட்டு ஆறுதல் கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலக சங்கத்தினர் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு அதிகாரியை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது உங்களது பிரச்சனை குறித்து மனுவாக எழுதி கொடுங்கள், நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






