என் மலர்
நீங்கள் தேடியது "டெபாசிட் இழப்பு"
- பிரசாந்த் கிஷோர் மொத்தம் உள்ள 243 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கினார்.
- தனது கட்சி 150 இடங்களில் வெற்றி பெறும் என்றும் பிரசாந்த் கிஷோர் கூறிவந்தார்.
பீகார் தேர்தலுக்கு முன்பு வரை ஆளும்கட்சி, எதிர்க் கட்சிகளுக்கு மாற்றான அரசியல் சக்தியாகவும், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது யார்? என்பதை முடிவு செய்யும் கட்சியாகவும் பிரசாந்த் கிஷோரின் கட்சி இருக்கும் என்று கூறப்பட்டது.
அதற்கு ஏற்ப பா.ஜ.க., ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட ஆளும் கூட்டணியையும், ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டணியையும் தேர்தல் பிரசாரத்தில் பிரசாந்த் கிஷோர் கடுமையாக விமர்சித்து வந்தார்.
மொத்தம் உள்ள 243 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கினார். ஆனால் அவர்களில் 5 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகிவிட்டனர். இதனால் ஜன்சுராஜ் கட்சி 236 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது.
இந்த தேர்தலில் முதலில் போட்டியிடப் போவதாக அறிவித்து பின்னர் போட்டியில் இருந்து கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் விலகினார். தனது கட்சி 150 இடங்களில் வெற்றி பெறும் என்றும் பிரசாந்த் கிஷோர் கூறிவந்தார்.
பீகாரில் ஆட்சிக்கு வந்தால் இப்போது அமலில் உள்ள மதுவிலக்கை ரத்து செய்து மீண்டும் மது விற்பனையைத் தொடங்குவோம் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் அவரது கட்சிக்கு பீகார் மக்கள் படுதோல்வியைப் பரிசளித்துள்ளனர்.
போட்டியிட்ட 238 தொகுதிகளில் அனைத்திலும் ஜன்சுராஜ் கட்சி வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். அதோடு 236 தொகுதிகளில் டெபாசிட்டும் பறி கொடுத்தனர்.
சில இடங்களில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை ('நோட்டா') வாக்குகளை விடவும் குறைவாகப் பெற்றனர். இதன் மூலம் பீகார் மக்கள் தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோரை முழுமையாக புறக்கணித்து இருப்பது தெரியவந்துள்ளது.
தேர்தல் பிரசாரத்தின்போது பா.ஜ.க. தலைவர்கள் யாரும் பிரசாந்த் கிஷோர் பற்றி ஒருவார்த்தை கூட பேசவில்லை. அதுபோல இந்தியா கூட்டணி தலைவர்களும் பிரசாந்த் கிஷோரை கண்டு கொள்ளாமல் தவிர்த்தனர். இதுவும் பிரசாந்த் கிஷோர் கட்சி தோல்விக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி தமிழகத்தில் தி.மு.க., மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கும் தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் பணியாற்றி உள்ளார்.
அப்போது தேர்தல்களில் அக்கட்சிகள் வெற்றி பெற்றதால் தேசிய அளவில் மிகவும் பிரபலமான அரசியல் நிபுணராக பிரசாந்த் கிஷோர் உருவெடுத்தார். ஆனால் அவரது கட்சிக்கு பலன் அளிக்காமல் போய்விட்டது.
திருவண்ணாமலை:
மக்களவை தேர்தல் கடந்த மாதம் 18-ந்தேதி நடைபெற்றது. ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் பதிவான வாக்குகளில், 6-ல் ஒரு பங்கு வாக்குகளை பெற்றிருந்தால் செலுத்தப்பட்ட டெபாசிட் தொகையை வேட்பாளர் தக்க வைத்துக் கொள்வார்கள்.
திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரமேஷ்பாபு (27,503) வாக்குகள்), மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அருள் (14,654 வாக்குகள்), அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ஞானசேகர் (38,639 வாக்குகள்) உட்பட 23 வேட்பாளர்கள், தங்களது டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.
6,66,272 வாக்குகளை பெற்று தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையும், 3,62,085 வாக்குகளை பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியும் டெபாசிட் தொகையை தக்க வைத்துக் கொண்டனர்.
ஆரணி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழரசி (32,409 வாக்குகள்), மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஷாஜி (14,776 வாக்குகள்) அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செந்தமிழன் (46,383 வாக்குகள்) உட்பட 13 வேட்பாளர்கள், டெபாசிட் தொகை இழந்துள்ளனர்.
6,17,760 வாக்குகளை பெற்று காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தும், 3,86,954 வாக்குகளை பெற்று அ.தி.மு.க. வேட்பாளர் ஏழுமலையும் டெபாசிட் தொகையை தக்க வைத்துக் கொண்டனர்.
ஆரணி மக்களவை தொகுதியில் பதிவான 11,14,699 வாக்குகளில் 1,90,284 வாக்குகளை பெற்றிருந்தால் டெபாசிட் தொகை திரும்ப கிடைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 6 லட்சத்து 72 ஆயிரத்து 190 வாக்கு பெற்று வெற்றி பெற்றார். பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி 3 லட்சத்து 43 ஆயிரத்து 234 ஓட்டு பெற்று தோல்வியடைந்தார்.
இவர்களை தவிர இந்த தொகுதியில் போட்டியிட்ட 17 வேட்பாளர்கள் டெபாசிட் இழுந்தனர்.






