search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivanthi cup"

    • பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சிவந்தி கோப்பைக்கான 20-வது ஆண்டு மாநில அளவிலான வினாடி-வினா போட்டி நடந்தது.
    • உடன்குடி சல்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சிவந்தி கோப்பையை வென்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பயின்றோர் கழகம் சார்பில், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சிவந்தி கோப்பைக்கான 20-வது ஆண்டு மாநில அளவிலான வினாடி-வினா போட்டி நடந்தது.

    கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்பத்துறை பேராசிரியரும், பயின்றோர் கழக பொருளாளருமான சித்ரா தேவி வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் நாராயணராஜன் வாழ்த்தி பேசினார்.

    பெங்களூரு ஈக்கோ வேர்ல்ட் டெக் சிஸ்டம்ஸ் குளோபல் சர்வீஸ் நிறுவன மூத்த மேலாளர் குமரன் ராமஜெயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், கற்றல் ஒரு தொடர்ச்சியான செயல்முறை, மாணவர்கள் தங்களது திறன்கள் மற்றும் அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்றார்.

    இதில் 25 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முதலில் பொது அறிவு, நாட்டு நடப்பு, தொழில்நுட்பம், அடிப்படை அறிவியல் ஆகியவற்றில் இருந்து மாணவர்களுக்கு எழுத்து தேர்வு நடந்தது. இதில் தேர்வு செய்யப்பட்ட 6 அணிகள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றன.

    சர்வதேச மனிதவள மற்றும் வினாடி-வினா போட்டி நிபுணர் ஜஸ்டின் ஆண்டனி இறுதிச்சுற்று வினாடி-வினா போட்டியை நடத்தினார். இதில் உடன்குடி சல்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முகமது பவாஸ், பொன் காயத்ரி முதலிடம் பிடித்து சிவந்தி கோப்பையை வென்றனர்.

    கன்னியாகுமரி எஸ்.ஆர்.கே.பி.வி. மெட்ரிக் மேல்நி லைப்பள்ளி மாணவர்கள் அஸ்வந்த், அகிேலஷ் கோவர்தன் 2-வது இடமும், சாகுபுரம் கமலாவதி மேல்நி லைப்பள்ளி மாணவர்கள் ஸ்ரீராம், அப்துல் ஹரீத் 3-வது இடமும் பிடித்தனர்.

    வெற்றி பெற்ற மாண வர்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இறுதிச்சுற்றில் பங்கேற்ற வர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. முதலிடம் பிடித்த உடன்குடி சல்மா பள்ளி மாணவர்களுக்கு சிவந்தி சுழல் கோப்பையும், ரொக்கப்பரிசும் கல்லூரி நாள் விழாவில் வழங்கப்படும்.

    • ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
    • 2-வது ஆட்டத்தில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியும், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியும் விளையாடியது. ஆதித்தனார் கல்லூரி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    திருச்செந்தூர்:

    பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் 17-வது சிவந்தி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது.

    தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் சாம்ராஜ் வரவேற்று பேசினார். ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    இதில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி, வ.உ.சி. கல்லூரி, நெல்லை பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரி, நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி, எஸ்.டி. இந்து கல்லூரி ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளனர்.

    வெற்றி பெற்ற அணிகள்

    முதல் போட்டியில் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியும், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியும் மோதின. இதில் வ.உ.சி. கல்லூரி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியும், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியும் விளையாடியது. ஆதித்தனார் கல்லூரி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    3-வது போட்டியில் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியும், பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரியும் மோதியதில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4-வது ஆட்டத்தில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியும், நாகர்கோவில் எஸ்.டி. இந்து கல்லூரியும் விளையாடியது. இதில் 23 ரன்கள் வித்தியாசத்தில் எஸ்.டி. இந்து கல்லூரி வெற்றி பெற்றது.

    • சிவந்தி கோப்பைக்கான மாநில அளவிலான 19-வது ஆண்டு வினாடி-வினா போட்டி நடைபெற்றது.
    • தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற நேர்மறையான எண்ணம் மற்றும் சீரான முயற்சியே வெற்றியின் தாரகமந்திரம் என கியூமத் ஆசிரியர் சுகன்யா பாலாஜி பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில், பயின்றோர் கழகம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சிவந்தி கோப்பைக்கான மாநில அளவிலான 19-வது ஆண்டு வினாடி-வினா போட்டி நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார். கணினித்துறை பேராசிரியர் ஜென்ஸி வரவேற்று பேசினார். பயின்றோர் கழக செயலாளர் ஜோஸ்வா பாபு, சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். கியூமத் ஆசிரியர் சுகன்யா பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் கூறுகையில் 'தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற நேர்மறையான எண்ணம் மற்றும் சீரான முயற்சியே வெற்றியின் தாரகமந்திரம்' என்றார்.

    தொடர்ந்து நடந்த வினாடி-வினா போட்டியில் 15 பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இறுதிச்சுற்றில் 6 அணிகள் தேர்வு செய்யப்பட்டன. இறுதிச்சுற்று வினாடி-வினா போட்டியை கணினித்துறை பேராசிரியர் கேசவராஜா நடத்தினார். இதில் நெல்லை சங்கர்நகர் ஸ்ரீஜெயேந்திரா சரஸ்வதி சுவாமிகள் கோல்டன் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தை பிடித்து, சிவந்தி கோப்பையை வென்றது. தண்டுபத்து அனிதா குமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2-வது இடத்தையும், சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப்பள்ளி 3-வது இடத்தையும் பிடித்தது.

    பின்னர் பரிசளிப்பு விழா நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. முதலிடம் பெற்ற அணிக்கு சிவந்தி சுழற்கோப்பையும், ரொக்கப்பரிசும் கல்லூரி நாள் விழாவில் வழங்கப்படுகிறது. முடிவில், தகவல் தொழில்நுட்ப துறை பேராசிரியர் சித்ரா தேவி நன்றி கூறினார்.

    ×