search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sibling conflict"

    • விவசாய நிலம் காரணமாக அண்ணன் தம்பி இடையேமுன்விரோதம் இருந்ததாக தெரிகிறது.
    • சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே டி. குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாவாடை. இவரது தம்பி குமார். இவர்களுக்கு அதே பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளது. இந்த விவசாய நிலம் காரணமாக அண்ணன் தம்பி இடையே சில நாட்களாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் முன் விரோதம் காரணமாக நேற்று குமார் மற்றும் குமாரின் மனைவி கலையரசி மகன் அய்யப்பனுடன் பாவாடை வீட்டிற்கு சென்று அவரது மனைவி அலமேலுவை தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த அலமேலு கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×