search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shunya mudra"

    காது அடைப்பு, காது மந்தம், காது சவ்வு கிழிதல், காதில் சீழ் வழிதல் பிரச்சனைகளுக்கு முதலுதவி போல இந்த முத்திரையைச் செய்த பின், தகுந்த மருத்துவரை அணுகலாம்.
    உடலில் ஆகாயம் எனும் பஞ்சபூத சக்தியை அதிகரிக்கும் முத்திரையாகும்.

    செய்முறை :

    நடுவிரல் நுனியால் கட்டை விரல் நுனியை அழுத்தமாகத் தொட்டு ஏனைய மூன்று விரல்களையும் வளையாது நிமிர்த்தி பிடிக்கவும்.

    தரை விரிப்பின் மீது சம்மணமிட்டோ, நாற்காலியில் அமர்ந்து கால்களைத் தரையில் ஊன்றியோ செய்யலாம். நின்றுகொண்டோ, நடந்துகொண்டோ செய்யக் கூடாது.

    ஒரு நாளைக்கு இரு வேளை வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.

    ஐந்து முதல் 10 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.

    ஆகாய முத்திரையை ஒரு கையில் மட்டும் செய்யக் கூடாது.

    பலன்கள் :


    காது, எலும்பு சம்பந்தப்பட்ட குறைபாடுகளை குணப்படுத்துகிறது, அத்தோடு தூக்கமின்மையையும், இதயம் தொடர்பான பிரச்சினைகளை குணப்படுத்துகின்றது.

    பயணங்களால் ஏற்படும் தலைசுற்றல், வாந்தி, ஜெட்லாக் காதுவலி, காது இரைச்சல் போன்றவற்றைத் தவிர்க்க, இதைச் செய்யலாம். பயணம் தொடங்குவதற்கு ஐந்து முதல் 10 நிமிடங்களுக்கு முன்பும் இந்த முத்திரையைச் செய்யலாம்.

    வயதாகும்போது காதுகளில் கேட்கும் திறன் குறையும். கேட்கும் திறன் மேம்பட இந்த முத்திரை உதவும்.

    பல்வலி, ஈறுகளில் ஏற்படும் வலி, பற்கூச்சம் ஆகியவற்றுக்கு இந்த முத்திரையைச் செய்யலாம்.

    மன அழுத்தம் குறைய இரு வேளையும் இந்த முத்திரையைச் செய்யலாம்.

    அதிக நேரம் ஹெட் செட், தொலைபேசி, கைபேசி ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் தொந்தரவுகளுக்கு இந்த முத்திரையைச் செய்யலாம்.

    காது அடைப்பு, காது மந்தம், காது சவ்வு கிழிதல், காதில் சீழ் வழிதல் பிரச்சனைகளுக்கு முதலுதவி போல இந்த முத்திரையைச் செய்த பின், தகுந்த மருத்துவரை அணுகலாம்.

    வெர்ட்டிகோ, தள்ளாட்டம், நிலை தடுமாற்றம் போன்ற பிரச்னைகளுக்கு ஒருமாதம் வரை தொடர்ந்து செய்ய வேண்டும். காரணமின்றி ஏற்படும் விக்கல், கொட்டாவி விடுவதால் தாடையில் ஏற்படும் பிடிப்பு (Lock jaw) ஆகியவற்றை உடனடியாகச் சரிசெய்யும்.

    குழந்தைகள், வயோதிகர், இதயநோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு ஏற்படும் இதயப் படபடப்பு, முறையற்ற இதயத்துடிப்பு (Irregular heart beat), முறையற்ற ரத்த அழுத்தம் ஆகியவை மட்டுப்படும்.

    மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு குறைய 2-5 நிமிடங்கள் மட்டும் செய்யலாம்.

    தினமும் இரு வேளை ஐந்து நிமிடங்கள் செய்ய, எலும்பு அடர்த்திக் குறைதல் பிரச்சனை தடுக்கப்படுகிறது.

    அதீத உற்சாகம், அதிக துக்கம், கவலை, பயம், அதிக படபடப்பு, அதிக சிந்தனை கட்டுக்குள்வர இந்த முத்திரை உதவும்.
    இந்த முத்திரை மனஅழுத்தம், கவலையால் ஏற்படும் நெஞ்சுவலி, அதிகமான சிந்தனை ஓட்டம், சீரற்ற ரத்த அழுத்தம், மனக்குழப்பம் ஆகிய பிரச்சனைகளைப் போக்கும்.
    உடலில் ஆகாயம் எனும் பஞ்சபூத சக்தியை குறைக்கும் முத்திரையாகும்

    செய்முறை :

    நடுவிரலை கட்டைவிரலின் அடியில் வைத்து அழுத்தி ஏனைய மூன்று விரல்களையும் நிமிர்த்தி பிடிக்கவும்.

    விரிப்பில் அமர்ந்து கொண்டு இந்த முத்திரையை செய்ய வேண்டும்.

    காது கோளாறு இல்லாதவர்கள் இந்த முத்திரையை செய்யக் கூடாது. செய்தால் காதுகளில் அடைப்பு ஏற்படும்.

    இந்த முத்திரையை செய்யும் பொழுது இரண்டு கைகளையும் உபயோகிக்க வேண்டாம்.

    பலன்கள் :

    மனஅழுத்தம், கவலையால் ஏற்படும் நெஞ்சுவலி, அதிகமான சிந்தனை ஓட்டம், சீரற்ற ரத்த அழுத்தம், மனக்குழப்பம் ஆகிய பிரச்சனைகளைப் போக்கும்.
    கடுமையான காது இரைச்சல், காதுக்குள் ஏதோ ஒலி கேட்பது, யாரோ பேசுவதுபோல் தோன்றுவது ஆகிய தொந்தரவுகளுக்கு 30 நிமிடங்கள் வரை செய்யலாம்.

    வெர்டிகோ’ (Vertigo) எனப்படும் தலைச்சுற்றல் சில நாட்களிலேயே கட்டுப்படும்.

    வயோதிகம் காரணமாக அல்லது இடையில் ஏதேனும் சில காரணங்களால் காது கேளாமை, பிறவியிலேயே காது கேளாமை ஆகிய பிரச்சனை இருப்பவர்கள் செய்துவர, மாற்றங்கள் தெரியும். காதில் சீழ், புண் ஆகியவை குணமாகும்.

    பயணங்களின்போது ஏற்படக்கூடிய தலைச்சுற்றல், வாந்தி, குமட்டல் உள்ளிட்டவை வராமல் தடுக்க, இரண்டு நாட்களுக்கு முன்னரே செய்து வருவது நல்லது.

    தீவிர காய்ச்சல், நாட்பட்ட நோய்கள் ஆகியவை படிப்படியாகக் குறையும்.

    மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, கட்டியாக உதிரம் வெளியேறுதல், நீண்ட நாட்களுக்கு உதிரம் வெளியேறுதல் ஆகியவற்றுக்கு, மாதவிடாய் சமயத்தில் இந்த முத்திரையைச் செய்து பலனடையலாம்.

    ×