search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shopkeeper Died"

    • தனசேகர் சங்கர்நகர்-தென்கலம் சாலையில் ஒரு வணிக வளாகத்தில் மளிகை கடை நடத்தி வந்தார்.
    • பலத்த காயமடைந்த தனசேகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    நெல்லை:

    நெல்லை தாழையூத்து சர்க்கிள் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் தனசேகர் (வயது 60).

    வணிக வளாகம்

    இவர் சங்கர்நகர்-தென்கலம் சாலையில் ஒரு வணிக வளாகத்தில் மளிகை கடை நடத்தி வந்தார். இவரது கடையின் அருகே பேக்கரி மற்றும் மருந்தகம் உள்ளது. இதன் மேல் தளத்தில் 6 கடைகள் பூட்டி கிடக்கிறது.

    சுமார் 70 ஆண்டுகள் பழமையான இந்த வணிக வளாகம் ஆங்காங்கே வெடிப்பு விழுந்து காணப்பட்டது. இதனால் மேல் தளத்தில் உள்ள 6 கடைகளும் காலி செய்யப்பட்டன. இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி தனசேகர் பலசரக்கு கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு செல்ல கடையின் முகப்புக்கு வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மேல் தளத்தில் உள்ள கடைகளுக்கு செல்லும் நடைபாதை இடிந்து விழுந்தது.

    பரிதாப சாவு

    இதில் தலையில் பலத்த காயமடைந்த தனசேகர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு பரிதாபமாக இறந்தார்.

    தற்போது விபத்து நடந்த இந்த கட்டிடம் மிகவும் பழமையானது என்பதால் அதில் மீதி உள்ள கடைகளை உடனடியாக காலி செய்து விட்டு கட்டிடம் முழுமையாக இடித்து அகற்றப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விபத்து தொடர்பாக தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×