search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shirdi Sai Baba Temple"

    கொரோனா தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்ட ஊழியர்கள் மற்றும் 50 சதவீத இருக்கை வசதியுடன் மட்டுமே அன்னதான கூடம் செயல்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
    சீரடி :

    லட்சக்கணக்கான பக்தர்கள் நாள் தோறும் வந்து செல்லும் மராட்டிய மாநிலம் அகமது நகரில் உள்ள சீரடி சாய்பாபா கோவில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக முடங்கியது. பக்தர்கள் வருகைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொற்று பாதிப்பு குறைந்ததை அடுத்து சமீபத்தில் நீக்கப்பட்டது. தற்போது ஆன்லைன் பதிவு செய்யும் 15 ஆயிரம் பக்தர்களுக்கும், நேரடியாக வரும் 10 ஆயிரம் பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இதன்மூலம் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்ய முடிகிறது.

    இருப்பினும் கோவில் அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் அன்னதானம், பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் ஆகியவை வழங்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் நிறுத்தப்பட்ட இந்த வசதிகளை மீண்டும் தொடங்க கோவில் அறக்கட்டளைக்கு அனுமதி அளித்து அகமதுநகர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர போசலே உத்தரவு பிறப்பித்துள்ளார். இருப்பினும் கொரோனா தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்ட ஊழியர்கள் மற்றும் 50 சதவீத இருக்கை வசதியுடன் மட்டுமே அன்னதான கூடம் செயல்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
    கொரோனா பாதிப்புக்கு முந்தைய காலத்தில் சீரடிக்கு தினமும் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.
    சீரடி :

    மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா கோவில் கடந்த அக்டோபர் மாதம் 6-ந்தேதி திறக்கப்பட்டது. ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் மகாராஷ்டிராவில் தொற்று பாதிப்பு மேலும் குறைந்துள்ளதை அடுத்து கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆலோசிக்க அகமதுநகர் மாவட்ட கலெக்டர் தலைமையில் நேற்று கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சாய்பாபா கோவிலில் அனைத்து கொரோனா விதிமுறைகளையும் பின்பற்றி, தினசரி நேரடியாக தரிசனத்துக்கு வரும் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டது.

    மாவட்ட கலெக்டர் ராஜேந்திர போசலே இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

    சீரடி கோவிலில் ஏற்கனவே ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் நேரடி தரிசனத்துக்கு 10 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுவதால் இனி தினசரி 25 ஆயிரம் பக்தர்கள் சாய்பாபாவை தரிசனம் செய்ய முடியும்.

    கொரோனா பாதிப்புக்கு முந்தைய காலத்தில் சீரடிக்கு தினமும் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்கு இளநீர் அபிஷேகத்திற்காக பிச்சைக்காரர் ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.
    நகரி:

    ஆந்திர மாநிலம் விஜயவாடா முத்தியால்பாடு பகுதியில் சீரடி சாய்பாபா மந்திரம் என்ற கோவில் உள்ளது.

    சாய்பாபா மகாசமாதி அடைந்து 100 ஆண்டுகள் ஆவதையொட்டி இந்த கோவிலில் வருகிற 26-ந்தேதி 1 லட்சம் இளநீர் அபிஷேகம் நடக்கிறது.

    இந்த இளநீர் அபிஷேகத்துக்காக அதே சாய்பாபா கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர் யாகிரெட்டி என்பவர் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் நன்கொடை அளித்துள்ளார். அவருக்கு கோவில் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

    இவர் இதற்கு முன்பு அந்த சாய்பாபா கோவில் கட்டுவதற்காக ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கி இருந்தார்.

    இதுகுறித்து பிச்சைக்காரர் யாகிரெட்டி கூறுகையில், “நான் இந்த கோவில் வாசலில் பிச்சை எடுக்கிறேன். சாய்பாபா அருளால்தான் எனக்கு இவ்வளவு பணம் கிடைக்கிறது. எனவே அந்த பணத்தை சாய்பாபாவுக்காகவே செலவு செய்கிறேன்” என்றார்.

    ×