search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sexual harassment of female students"

    • 24 மாணவிகளை தினமும் அழைத்து பாலியல் தொல்லை யில் ஈடுபட்ட அவலம்
    • ஜெயிலில் அடைப்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள டி.கல்லேரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.

    இந்த பள்ளி தலைமை ஆசிரியராக மீனாசாந்தி மேரி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் விருது விளங்கினான் கிராமத்தைச் சேர்ந்த சி.லட்சுமணன் என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார்.

    இவர் கடந்த ஜூன் மாதம் முதல் அந்த பள்ளியில் படிக்கும் 24 மாணவிகளை தினமும் அழைத்து பாலியல் தொல்லை யில் ஈடுபட்டு ள்ளதாக கூறப்படுகிறது.

    மிரட்டி அத்துமீறல்

    மேலும் இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி அடித்துள்ளார். இது குறித்து மாணவிகள் பெற்றோ ர்களிடம் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பெண் அலுவலர் புவனேஸ்வரி மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். இதில் ஆசிரியர் மாணவிகளை தொடுவது மிரட்டி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

    பின்னர் இது தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தார்.அதன் அடிப்படையில் தலைமை ஆசிரியை மீனா சாந்தி மேரி தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.இதனையறிந்த ஆசிரியர் லட்சுமணன் தப்பி ஓடிவிட்டார். அவரை பிடித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.

    பின்னர் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இது தொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.பின்னர் நடந்த விசாரணைக்கு பிறகு அவரை அதிகாரிகள் சஸ்பெண்டு செய்தனர்.

    ×