search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Set on fire and burn"

    • சாலையில் நிறுத்தி வைத்திருந்தபோது துணிகரம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் கோவிந்தராஜ் வயது (45).

    மினி வேனில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவு ஆம்பூர் - பேரணாம்பட்டு சாலையில் வேனை நிறுத்தி வைத்திருந்தார்.

    இன்று அதிகாலை 5 மணி அளவில் மர்ம கும்பல் வேனிற்கு தீ வைத்துள்ளனர்.

    இதனால் வேன் முற்றிலும் எரிந்து சாம்பலானது. அதில் இருந்த பொருட்களும் தீயில் கருகியது. இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ேஜாடுகுளியில் 2021-ம் ஆண்டு தீவட்டிப்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • 2 டன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ேஜாடுகுளியில் 2021-ம் ஆண்டு தீவட்டிப்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து சேலம் வழியே கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல முயன்ற 2 டன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஓமலூர் நீதிமன்ற உத்தரவுப்படி அந்த புகையிலை பொருட்களை தீவட்டிப்பட்டி போலீசார் நேற்று தாசசமுத்திரம் ஏரி அருகே தீ வைத்து அழித்தனர்.

    ×