என் மலர்
நீங்கள் தேடியது "Semminar"
- வணிக நிர்வாகவியல் துறை சார்பில் “புதிய வானத்தை திறப்பதற்கான புதிய வணிக மாதிரிகள்” என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
- பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியின் வணிகவியல் பேராசிரியர் ஷேக் அப்துல்லா சிறப்புரையாற்றினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் "புதிய வானத்தை திறப்பதற்கான புதிய வணிக மாதிரிகள்" என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். வணிக நிர்வாகவியல் தலைவர் அந்தோணி சகாய சித்ரா வரவேற்றார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியின் வணிகவியல் பேராசிரியர் ஷேக் அப்துல்லா சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், மாணவர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கு ஏற்ற வழிமுறைகளை எடுத்துக் கூறினார். கருத்தரங்கில் கோவிந்தம்மாள் ஆதிததனார் கல்லூரி, காமராஜ் கல்லூரி, சங்கர பகவதி கல்லூரி, அரசு கலை கல்லூரி, போப் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் இருந்து மாணவர்களும், பேராசிரியர்களும் கலந்துகொண்டனர்.
கருத்தரங்கில் ராமசாமி வெங்கட சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு செயல்முறை விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் ஆதித்தனார் கல்லூரியின் முனைவர் பாலு, வேலாயுதம், ரமேஷ், கவிதா, தீபாராணி, கோகிலா, திருச்செல்வம், ஜெயராமன், அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். முடிவில், வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் தர்ம பெருமாள், செல்வகுமார் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.






