search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Selling Banned Tobacco"

    • தூத்துக்குடி மார்க்கெட் பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை கவரில் மறைத்து வைத்து விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
    • அங்கு விரைந்து சென்ற போலீசார் சந்தேகப்படும் படியாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர் விசாரணையில் அவர் தூத்துக்குடி ரங்கநாதபுரம் கிழக்கு தெரு பகுதி சேர்ந்தவர் மணிமாறன் (வயது 41)என்பது தெரிய வந்தது. அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கங்கைநாதபாண்டியன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது மார்க்கெட் பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை கவரில் மறைத்து வைத்து விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் சந்தேகப்படும் படியாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர் விசாரணையில் அவர் தூத்துக்குடி ரங்கநாதபுரம் கிழக்கு தெரு பகுதி சேர்ந்தவர் மணிமாறன் (வயது 41)என்பது தெரிய வந்தது. அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார்,அவரிடம் வெள்ளை நிற சாக்கு பையில் இருந்த 32 கிலோ புகை பாக்கெட்டுகளையும், அதனை விற்பனை செய்து வைத்திருந்த ரூ.38 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்,தொடர்ந்து மணிமாறனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×